என் மலர்
நீங்கள் தேடியது "TN Governor"
- எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன்
- வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
ஆளுநரை பார்த்திபன் புகழ்ந்து பேசியது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பார்த்திபனை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு குறித்து விமர்சனங்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.
உ வே சாமிநாதையரின் 'என் சரித்திரம்' புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக "தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்" என்று துவங்கி "தமிழக ஆளுனருக்கு மரியாதை" எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். "பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல" என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை "இது ஒரு வகையான positive politics " என்றார்.
பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் 'கவர்னர் பீடி' என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்! தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா"கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு" கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாக கூறி "கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி" எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய்
1-தமிழ்
2-தமிழ்
3-தமிழ்
என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி 'சங்கீ'தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு:
பத்ம விருதோ, கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்!
ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ'தமாய் பாடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று பார்த்திபன் பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
கவர்னரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்.
திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.
அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று.
மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.
ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.
இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது.
நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?
அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?
தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற
புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.
- பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
- விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.
விழாவுக்கு கவர்னரும், வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் முதன்மை விருந்தினராக, சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் 4 ஆயிரத்து 434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
அதன்படி இளம் அறிவியல் பிரிவில் 1,263 பேரும், முதுநிலை பிரிவில் 225 பேர், முனைவர் படிப்பில் 48 பேர் என மொத்தம் 1,536 மாணவ, மாணவிகளும், உறுப்பு மற்றும் இணைக்கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் 2,877 பேரும், முதுநிலை பிரிவில் 13 பேரும், முனைவர் படிப்பில் 6 பேர் என மொத்தம் 2,898 பேர் என இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 434 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், இணை வேந்தருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
- இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது.
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் இயக்குனருர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன்.
ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார்.
அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. காதல் அப்படிதான்.
என் முதல் புத்தகம் கிறுக்கல்கள். என்னுடைய அடுத்த புத்தகம் வழிநெடுக காதல் பூக்கும். அடிக்கடி ஒவ்வொரு மொமெண்ட்லும் ஒரு காதல் மலரும்.
அப்படி எனக்கு அவர் மீது காதல் மலர்ந்தது. இது தொடரணும். இன்னும் அவர் செய்யும் நிறைய நல்ல விஷயங்களுக்கு நானும் உடந்தையாக கூட இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.
- ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடனும் மீள்தன்மையுடனும் வென்றீர்கள்.
- உறுதியும் துணிச்சலும் சேர்ந்தால் அவை எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை சாதனையாக மாற்றும் என்பதை நிரூபிக்கிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்னை பூமிக்கு மீண்டும் வருக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்! மிக கடுமையான விண்வெளி பரப்பில் மாதக்கணக்கில் நீங்கள் இருந்தது உங்களின் சகிப்புத்தன்மை, தகவமைப்பு மற்றும் மன உறுதியின் வரம்புகளை சோதித்துள்ளன.
ஆனாலும் ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடனும் மீள்தன்மையுடனும் வென்றீர்கள். நீங்கள் அன்னை பூமிக்கு திரும்புவதென்பது தாயகத்துக்கு திரும்புவது என அழைப்பதை விட மேலதிகமானது; இது விடாமுயற்சியின் வரலாற்றுபூர்வ வெற்றியாகும், இது உறுதியும் துணிச்சலும் சேர்ந்தால் அவை எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை சாதனையாக மாற்றும் என்பதை நிரூபிக்கிறது.
நீங்கள் முன்னோக்கும் பயணம் புதிய எல்லைகளைத் திறந்து, எதிர்கால விண்வெளி ஆய்வாளர்களை பிரபஞ்சத்தின் எல்லையைக் கடந்து ஆய்வு மேற்கொள்ள ஊக்குவிக்கட்டும் என கூறியுள்ளார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் கவர்னர்.
- அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?
சென்னை:
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.க. தலைவர் வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவர்னர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாடவிடுவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.
இந்த வரிசையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் கவர்னர். அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?
இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என்று பேசி இருக்கிறார் கவர்னர்.
ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்த நாடுகள் 195 என்றால், அதில் 30 நாடுகள் மட்டும்தான் மதச்சார்புள்ள நாடுகளாகச் சொல்கிறது. அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு நாட்டுத் தலைவர்களாக ஆகமுடியும். 29-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பும், சார்பின்மையும் கொண்ட நாடுகள். மற்றபடி 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்ற நாடுகள் தான்.
'எந்த ஒரு நாடும் ஏதாவது மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்' என்று கவர்னர் சொல்வது உலகம் அறியாப் பேச்சாகும்.
அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரைக்கு எதிராக கவர்னர் பேசுவதையும், கருத்து சொல்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மனு ஒன்றை தயார் செய்து வருகிறார்கள்.
- மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு குறித்தும் கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையடுத்து கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மனு ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். அந்த மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பில் அவர் கூறி இருப்பதாவது:-
கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட உள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட அழைக்கிறோம்.
3-ந்தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து அந்த மனுவை படித்து பார்த்து கையெழுத்திட கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
- ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க முடிவு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.
இந்நிலையில், ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் பின்னர் நாளை இரவு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க உள்ள நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கி, அரசியலமைப்பு விழுமியங்களை காத்திட வேண்டும் என்று புகார்.
- ஆளுநரை திரும்ப பெறக்கோரிய மனுவில் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையே சில விஷயங்கள் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினர்.
கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒரு மனு தயாரித்து அதில் கையெழுத்திட்டனர்.
இந்த மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் நேரில் கொடுக்க நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சார்பில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் மாநிலத்தின் பெயரளவிலான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை அவரது பெயரிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
ஆகவே, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும் செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதும் மக்களாட்சிக்குச் சாவுமணி அடிப்பதுமான செயலாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவதையோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஆட்சியுரிமையை மாநில மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு வழங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக, தி.மு.க. அரசு இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து, மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.
எனினும், தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவையின்றிக் காலந்தாழ்த்துகிறார். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாக இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களுக்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதாக இருக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.
பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக திகழ்கிறது. கவர்னர் ஆர்.என். ரவி இந்நாட்டின் மதச்சார்பின்மை கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொதுவெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார். இத்தேசத்தின் மதச்சார்பின்மைப் பண்புகளில் மாறாப்பற்று கொண்ட எங்கள் அரசுக்கு இது பெரும் சங்கடமாக உள்ளது.
தாம் வகிக்கும் கவர்னர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில், அவர் ஆபத்தான, பிளவு படுத்தும் நோக்கிலான, மதரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் பேசி வருகிறார்.
சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின்பால் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேசத்துரோகமானவை என்றும் சிலர் கருதக்கூடும்.
தனது நடத்தையாலும் செயல்களாலும், ஆர்.என்.ரவி அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட கவர்னர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆகவே அப்பொறுப்பில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
அரசியல் சட்டப் பிரிவு 156(1)-ன்படி, குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில் கவர்னர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே, தமிழ்நாடு கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் லோக் ஆயுக்தா தின விழா நடந்தது.
- மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஆரிப் முகமது கான் உள்ளார். அவருக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த கருத்து வேறுபாடு மூண்டது.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா தின விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
லோக் ஆயுக்தா சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். இச்சட்டத்தை யாரும் பலவீனப்படுத்த கூடாது. எந்த வகையிலும் அதற்கு முயற்சிக்க கூடாது.
இதனை மீறி லோக் ஆயுக்தா சட்டத்தை யாராவது பலவீனப்படுத்த முயன்றால் அதனை தடுக்க அம்மாநில கவர்னர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும். இதனை சுப்ரீம் கோர்ட்டும் தெளிவு படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கேரள சட்ட மந்திரி ராஜீவ் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்த வேண்டும், என்றார்.
- மாணவர்கள் தோல்வியை பார்த்து பயப்படக்கூடாது. தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்றுத் தரும்.
- அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியில் இந்தியா, தன்னிறைவு பெறும்.
சென்னை:
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-
மாணவர்கள் தோல்வியை பார்த்து பயப்படக்கூடாது. தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்றுத் தரும். தோல்விகளால் மாணவர்கள் மனம் தளரக்கூடாது.
அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியில் இந்தியா, தன்னிறைவு பெறும். அடுத்த 25 ஆண்டுகளில் சுயசார்பு இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.