என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists Ban On Bathing"

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது.

    நேற்றும் பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் பலத்த மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10.1 சென்டிமீட்டரும், நாலுமுக்கில் 9.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி தேயிலை தோட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நேற்று மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை நீட்டித்துள்ளது.

    களக்காடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

    • தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் தடை நீடிப்பு.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், தற்போதும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் 2-வது நாளாக இன்றும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் இன்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #CoutrallamFalls
    தென்காசி:

    குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி அதன் முன்புறம் உள்ள பாலம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஐந்தருவியிலும் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது.

    புலியருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அங்கும் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிற்றருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நேற்று மாலை பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதையடுத்து குற்றாலம்-தென்காசி சாலையில் பெண்கள் கல்லூரி அருகில் பழமையான மருதமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் இன்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று தென்காசி, குற்றாலம் பகுதியில் சற்று மழை குறைந்துள்ளது.

    இதேபோல் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் 3-வது நாளாக ஆக்ரோ‌ஷமாக கொட்டுகிறது. இதையடுத்து 3-வது நாளாக இன்று மணிமுத்தாறு அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  #CoutrallamFalls

    ×