என் மலர்
நீங்கள் தேடியது "tree"
- மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
- மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம்
அரியலூர்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டைச் சேர்ந்தவர் அரோக்கியம் மகன் செல்வம்(வயது54). இவர், திண்டுக்கல்லிலிருந்து அரியலூருக்கு லாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்துள்ளார்.ெஜயங்கொண்டம் சாலையில், ஜெனரேட்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் கீழே இறக்கும் போது, அருகிலிருந்து புளிய மரத்தில் பொக்லைன் இயந்திரம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் மரத்தின் இடிபாடுகளில் சிக்கி அதேயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர், மரத்தை அகற்றி செல்வத்தின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால், அரியலூர்} ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
- துளிகள் அமைப்பு சார்பில் 20,340 மரக்கன்றுகள்
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்புசார்பில் 20,340 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தநிலையில் 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா குண்டடம் யூனியன் தும்பலப்பட்டியில் நடைபெற்றது. குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நந்தவனம்பாளையம் ஊராட்சி தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் என்.பி. பாண்டியன், 6-வது வார்டு உறுப்பினர் பிரியா பூபதி, ஊராட்சி செயலாளர் ஜெயமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆற்றை ஆக்கிரமித்துள்ள
- கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
மழவராயநல்லூர் மருதையாற்று படுகை பகுதிகளில் வன விலங்குகள் தொல்லை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மருதையாறு தூர்ந்து போன நிலையில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால், மழை பெய்யும்போது வெள்ள நீர் விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இதுவும் எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றினால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
- நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவு
- வெட்டி விற்க முயன்ற கோவில் மரங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், 0.90 செண்டு நிலம் வேலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் வளர்ந்திருந்த வதனாரை மரங்களை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அசோக் (வயது40) என்பவர் வெட்டி தனி நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.இது பற்றி வந்த தகவலின்பேரில் தனி தாசில்தார் பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மரங்களை கைப்பற்றினார். சட்ட விரோதமாக கோயில் நிலங்களிலிருந்த மரங்களை வெட்டி விற்பனையில் ஈடுபட முயன்ற அசோக் மீது மேல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
- 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர்.
- மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரியில் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த 100 ஆண்டுகால மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பா.ம.க, பா.ஜனதா கட்சியினர் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து பா.ம.க. நகர செயலாளர் அண்ணாமலை, பா.ஜ.க. நகர செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த பாழடைந்த பழைய விடுதியை இடித்துவிட்டு நகராட்சி அலுவலகம் மற்றும் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்காக போதுமான இடவசதி இருந்தும் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர். இந்த மரங்கள் இருந்திருந்தால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மரங்களின் நிழலை பயன்படுத்த ஏதுவாக இருந்திருக்கும்.
தற்போது அரசு அனுமதியின்றி இந்த வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டதால் கோடை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்க கூட இடமில்லாமல் கடும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- 40 வயதான அரசமரம் - வேப்பமரம் ஆகிய 2 மரங்களும் அருகருகே வளர்ந்து உள்ளன.
- மக்கள் கடவுளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியில், சுமார் 40 வயதான அரசமரம்- வேப்பமரம் ஆகிய 2 மரங்க ளும் அருகருகே வளர்ந்து உள்ளன. இதனை அங்குள்ள மக்கள் கடவு ளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கி ழமை களில் வழிபாடு நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அரசு -வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்ய அந்தப் பகுதி மக்கள் முடிவெ டுத்தனர். இதை யடுத்து அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக அரச மரத்துக்கு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு கள் நடந்தன. மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டது.
அதை த்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, மந்திரங்கள் ஓதி, பொது மக்கள் புடை சூழ வேப்ப மரத்துக்கு தாலி கட்டி ,அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தண்டபாணி கோவில் அர்ச்சகர் நாகராஜ குருக்க ள் நடத்தி வைத்தார். அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
- வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை.
திருப்பூர்:
பல்லடம் திருச்சி ரோடு வனாலயத்தில் வான்மழை கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:-
வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை. மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு நாடு நன்றாக இருக்க 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் 24 சதவீதம் மட்டுமே உள்ளன. மரங்களை விரைவாக வளர வைப்பது, பயன்படுத்துதல் என்பதை ஆராய்ந்து வருகிறோம். வளர்ச்சி அடையும் நாடுகளில் இருந்த இந்தியா தற்போது வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- கனிம வளங்களை கேரளாவுக்கு ஏற்றி செல்ல இன்று காலை லாரி ஒன்று கடையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.
- கடையத்திற்கு மேற்கே இரப்பன் பாலம் அருகே லாரி வந்தபோது, அதிக வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த புளியமரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு ஏற்றி செல்ல இன்று காலை லாரி ஒன்று கடையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.கடையத்திற்கு மேற்கே இரப்பன் பாலம் அருகே லாரி வந்தபோது, அதிக வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த புளியமரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும் அவர் தூக்ககலக்கத்தில் இருந்தது தெரிய வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையம் பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது.
- துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் குட்டை அருகே தைல மரம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது. இதனை வருவாய்த்துறையினர் அகற்றவில்லை. இதுகுறித்து கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது மரம் சாய்ந்து விழுந்தது குறித்து துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுமதி கொடுத்த பின்பு தான் மரத்தை ஏலம் விட்டு அகற்றப்படும் என்றனர்.
- திடீரென வீசிய காற்றின் வேகம் காரணமாக பூவரச மரமானது வேரோடு பெயர்ந்து மருத்துவமனையின் நடைபாதையில் குறுக்காக விழுந்தது.
- 1 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அகற்றப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை.இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான பூவரச மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீசிய காற்றின் வேகம் காரணமாக பூவரச மரமானது வேரோடு பெயர்ந்து மருத்துவமனையின் நடைபாதையில் குறுக்காக விழுந்தது. அப்போது நோயாளிகளோ பார்வையாளர்களோ யாரும் உள்ளே செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், மற்றும் விபத்து ஏற்படவில்லை.
மேலும் மரம் பாதையின் குறுக்காக விழுந்ததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமலும், பார்வையாளர்கள் வெளியே செல்ல முடியாமலும் தவிப்புக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அகற்றப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டு பழமையான பூவரச மரம் காற்றுக்கு வேரோடு சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது.
- காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது.
களக்காடு:
திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது. அப்போது சூறை காற்றும் வீசியது. காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது. மரத்தில் கிளைகள் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையை அடைத்த படி விழுந்தன. இதனால் நோயாளிகள் சுகாதார நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
காற்றில் சாய்ந்த மரத்தின் கீழ் நோயாளிகள் சீட்டு பெற்று காத்திருப்பார்கள். மரம் விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பும் நோயாளிகளும், பொதுமக்களும் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர். மழை பெய்ய தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனை தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர். காற்றில் சாய்ந்த மரம் களக்காடு யூனியனுக்கு சொந்தமானது ஆகும். மரத்தை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
- காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.
திருப்பூர் :
காங்கயம் சுற்றுப்பகு தியில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
மழையின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தது. அதில், நத்தக்காடையூர், ரத்தினபுரியில் விநாயகர் கோவில் அருகே கூலி தொழிலாளி, சுப்பிரமணி, என்பவர் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. இதைப்போல் காங்கயம் - ஈரோடு ரோட்டில் முள்ளிப்புரம் பகுதியிலும், சுந்தராபுரி பகுதியிலும் பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைப்பட்டது.