என் மலர்
நீங்கள் தேடியது "Treesa Jolly"
- திரிஷா- காயத்ரி ஜோடி 21-12, 21-8 என எளிதாக வெற்றி பெற்றது.
- கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் சீன வீரரிடம் 15-21, 11-21 எனத் தோல்வியடைந்தார்.
சுவிட்சர்லாந்து ஓபன் 2025 பேட்மிண்டன் தொடர் பாசெலில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இரட்டையர் பிரவு போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடியான திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த், ஜெர்மனியின் அமெரிலி லீமேன்- செலின் ஹப்ஸ்ச் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடியான திரிஷா- காயத்ரி 21-12, 21-8 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பியான்ஷு ராஜாவத் 15-21, 17-21 என டோமா போபோவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஹெச்.எஸ். பிரனோயை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சீனாவின் லி ஷி பெங்கிடம் 15-21, 11-21 தோல்வியடைந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்தால் 40 நிமிடம் கூட தாக்குப்பிடிப்ப முடியவில்லை.
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்-நெதர்லாந்தின் கெல்லி வான் புய்டன் ஜோடி உடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஆல் இங்கிலாந்து சாம்பியனான தென் கொரியாவின் பாக் ஹா நா-லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது.
இதில், இந்திய ஜோடி 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் நடந்தது.
தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் திரிஷா ஜாலி-காயத்ரி கூட்டணி, தென்கொரிய ஜோடிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்-காங் யீ யாங் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 18-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-19, 24-22 என போராடி வென்று தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கும் முன்னேறியது.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
- அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.
இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி விளையாடினர்.
குமாமோட்டோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயியின் ஹூயின் ஹூய்-லின் ஜிக் யுன் இணையிடம் தோற்று நடையை கட்டியது.
இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் மோதுகிறார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றனர்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்டின் முதல் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடியும் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் ஜோடியும் மோதின. இதில் 21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்திய பெண்கள் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி,
தாய்லாந்தின் சுவாசாய்-ஜாங்சதாபாம்பான் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்த சுற்றில் இந்திய ஜோடி சீன ஜோடியுடன் மோதுகிறது.