என் மலர்
நீங்கள் தேடியது "tried to kill"
- கருப்பசாமி நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார்.
- அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி உமையம்மாள்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 25). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் கருப்பசாமியை அடித்து தாக்கினர். பின்னர் அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது சராமரியாக வீசி தாக்கினர்
பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (30). இவர்களுக்கு ஜெயராஜ் (5), அயன் சேவுககுமார் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.
தங்கவில்லம்மாளின் தங்கை சத்யா (25). இவருக்கு ராமமூர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி தனியாக வசித்து வந்தார். சத்யாவுக்கும் இளைராஜாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இது குறித்து தங்க வில்லம்மாள் தனது கணவரை கண்டித்தார். அதற்கு இளையராஜா தகாத உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று கோர்ட்டிலேயே சொல்லப்பட்டு விட்டது என கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இளையராஜா யாருக்கும் தெரியாமல் சத்யாவை கடத்திச் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த தங்கவில்லம்மாள் தனது 2 குழந்தைகளுக்கும் சாணிபவுடரை கொடுத்து தானும் அதனை குடித்தார். 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தனது மனைவி வேறு நபருடன் சென்றதால் சத்யாவின் கணவர் ராமமூர்த்தியும் விஷம் குடித்து பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விஷம் குடித்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 4 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (39). முருகன் மனைவி போதுமணியும் முருகவேல் மனைவி அபிராமியும் நட்பாக பழகி வந்தனர்.
இதனால் அபிராமி அடிக்கடி முருகன் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது முருகனுக்கும் அபிராமிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கடந்த 1 வருடத்துக்கு முன்பு 2 பேரும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களை ஊருக்கு அழைத்து வந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அவரவர் குடும்பத்துடன் வாழுமாறு அறிவுரை கூறினர். ஆனால் முருகவேல் தனது மனைவியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
அதன் பிறகு முருகனுக்கும், முருகவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உன்னால்தான் என் குடும்பம் சீரழிந்து விட்டது என முருகனிடம் முருகவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்தார். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.