என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trophies"

    • சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.
    • 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றுனர்.

    தரங்கம்பாடி:

    சோழமண்டலம் அளவிலான சதுரங்க போட்டி மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடைபெற்றது.

    இதில் சோழமண்டலத்துக்குள் தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர.

    வெற்றி பெறும் முதல் 10 இடங்களை பிடிக்கின்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழக செயலர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.

    பொருளாளர் அசோக், துணைச் செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆனந்த் தமிழ் வேந்தன் வரவேற்றார். ஏராளமான மாணவ.மாணவியர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர்.

    • 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் டெல்டா ஓபன் ரேஸ் பந்தயபுறா போட்டியில் வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பண்டாரவாடையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை கிளப் தலைவர் ஏ.ஆர்.தன்சிங் தலைமை வகித்தார். அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் துளசி ஐயா, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவர் அணி பொறுப்பாளர் முகமது மகரூப், மாவட்ட கவுன்சிலர் ராயல் அலி மற்றும் புறா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் 2019 முதல் 2022 வரையிலான பந்தய புறா போட்டிகளில் 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் என அதிக தூரம் வரை பறந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் இடம் பெற்று, வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பந்தய புறா வளர்ப்போர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர்.

    ஏற்பாடுகளை பாபநாசம் பந்தய புறா வளர்ப்போர் சங்க டெல்டா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    ×