என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck collide"

    • மோகன் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் வரவூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது மகன் நிரோஷன் (7) மகள் சியாஷினி (3) அழைத்து கொண்டு காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள கோவில் திருமாளம் என்கிற இடத்திற்கு பொருட்களை வாங்க வந்துள்ளார்.

    பின்னர் பொருட்களை வாங்கி விட்டு கோவில்திருமாளத்தில் இருந்து வரவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது பேரளம் அருகே அகரதிருமாளம் என்கிற இடத்தில் சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இருந்து மோகனின் மோட்டார் சைக்கிளிலில் மோதியது.

    இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர் அருகே லாரி மோதி டாக்டர், நில புரோக்கர் பலியாகினர். இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மினிலாரியின் டிரைவரை தேடி வருகின்றனர்.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஞானநிகேஸ் ஜெட்சன் (வயது 43). டாக்டரான இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வந்தார். இதனால் நாகர்கோவிலிலேயே தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ஞானநிகேஸ் ஜெட்சன் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் புதிதாக இடம் வாங்குவதற்காக பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்த நில புரோக்கர் மதன் (39) என்பவருடன் நேற்று மாலை காரில் சென்றார். அவர்கள் இருவரும் இடத்தை பார்த்துவிட்டு திரும்பியபோது, காவல்கிணறு நான்குவழிச்சாலையில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு காருக்கு பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நெல்லையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற மினிலாரி ரோட்டோரமாக நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் டாக்டர் ஞானநிகேஸ் ஜெட்சன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். நில புரோக்கர் மதன் படுகாயமடைந்தார்.

    இதனை பார்த்த விபத்துக்கு காரணமான மினிலாரியின் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மினிலாரி மோதியதில் காரும் ரோட்டோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்து குறித்து பணகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்து கிடந்த மதனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருடன் மினிலாரியின் கிளீனரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் லாரியின் கிளீனர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தப்பிச்சென்று விட்டார். பலியான டாக்டரின் உடலை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மினிலாரியின் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்துக்கு காரணமான மினிலாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார்? அதனை ஓட்டி வந்த டிரைவர் யார்? என போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நில புரோக்கர் மதன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்து பலி 2 ஆனது.
    நாட்டறம்பள்ளியில் லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாதவல்லியை சேர்ந்த ராமதாஸ் மகன் பிரதீப் (24). இவரது நண்பர் விஜய் (21). இருவரும் இன்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பிரதீப் பின்னால் அமர்ந்திருந்தார். நாட்டறம் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்தில் இறந்தார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது லாரி மோதியதில் மதுராந்தகத்தை சேர்ந்த அக்கா-தம்பி பலியாகினர்.
    வத்தலக்குண்டு:

    சென்னையை அடுத்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப் (வயது 21). இவர், அங்குள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23). இவர்கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி 4 பேரும், 2 மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்ட, பின்னால் கவுசல்யா அமர்ந்திருந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளை மெர்வின் ஓட்ட தோழி கயல்விழி உடன் சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக பிரதாப் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரதாப்பும், கவுசல்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மெர்வின், கயல்விழி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×