என் மலர்
நீங்கள் தேடியது "Turkey"
- தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்
- அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பிரபலமடையத் தொடங்கியுள்ள தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் சோலோகேமி [SOLOGAMY] திருமண முறைப்படி கடந்த வருடம் [2023] தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி [Sultanbeyli] மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.
நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- வீடுகள் குலுங்கியதால் பலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
- 190 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.24) இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. சிரியாவின் வடக்குப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் வீட்டிற்கு திரும்ப மக்கள் அச்சப்பட்டு தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.
நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர் என துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
பயம் காரணமாக வீட்டிற்கு ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார். மாலத்யாவில் இது போன்று 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளது. எலாஜிக்கில் நான்கு பேர் சேதமைடைந்த கட்டடத்தில் இருந்து காயமின்றி மீட்கப்பட்டனர்.
கடந்த வரும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஒன்று மலாத்யா. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்னர்.
- துருக்கியில் பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது.
- பதில் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது.
இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர் என்றும், 14 பேர் காயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. பதில் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் படையினர், போலீசார், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால் அப்பகுதி கலவர பகுதியாக காட்சி அளிக்கிறது. குர்தீஷ் பிரிவினைவாதிகள் அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி அதிபர் எர்டோகன் ரஷியா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
- 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.
இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
- சோச்சியில் இருந்து 89 பயணிகளுடன் தரையிறங்கியபோது தீ விபத்து
- விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.
95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைவாக வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கப்டவில்லை. இந்த விபத்து தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதுவரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
- மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.
- துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 2011 முதல் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டனர். ஆனால் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை.
திடீரென கடந்த வாரத்தில் ஒரு சாதராண நாளில் தொடங்கி 13 நாட்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு தாக்குதலில், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அதிபர் ஆசாத் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடம் பொருள் ஏவல் என்றால் அது மிகையாகாது.
இடம் பொருள் ஏவல்
'ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்' என்ற திருக்குறளே இங்கேயும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
கடந்த 2011 தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபர் ஆசாத்துக்கு பக்கபலமாக ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் கிளர்ச்சியை ஒடுக்க பேருதவியாக இருந்தது. கடைசியாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சொற்ப அலெப்போ நகர் பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆசாத்துக்கு பரிசளித்தது ரஷியா. தற்போது மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.

ஆசாத்
இருப்பினும் ரஷியா தற்போது உக்ரைன் போரில் ஈடுபட்டு வருவதால் சிரியாவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஈரான் இஸ்ரேலுடன் மோதிக்கொண்டு உள்ளது. ஆசாத்தின் இரண்டு கூட்டாளிகளும் திசைதிருப்பட்டிருக்கும் நிலையில் சிரியா எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது காத்திருந்த கிளர்ச்சியர்களுக்கு உறைத்துள்ளது
மேலும் முந்திய கிளர்ச்சியில் போராட்டக்காரர்களை ஒடுக்க ஆசாத்துக்கு முக்கிய உதவியாக இருந்த மற்றொரு அமைப்பு அண்டை நாடான லெபனானில் இயங்கி வந்த ஹசன் நஸ்ரல்லா தலைமையிலான ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது இஸ்ரேலுடனான மோதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு பெரும் படைகளையும் ஹிஸ்புல்லா இழந்துள்ளது.
நவம்பர் 27 அன்று லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் தங்களை சேதங்களில் இருந்து மீட்டுருவாக்கம் செய்து வரும் ஹிஸ்புல்லா இந்த முறை ஆசாத்துக்கு உதவி செய்யாமல் கை விரிந்துள்ளது.
ஊழல் - கொள்ளை
இதற்கிடையே சிரியாவிலும் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரிய அளவிலான ஊழல் மற்றும் அதிகாரிகளே கொள்ளையடித்த காரணத்தால் ராணுவ பீரங்கிகள் மற்றும் விமானங்களில் எரிபொருள் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்துள்ளது.
மேலும் பல சிரியர்கள் தங்கள் நாட்டு மக்களுடன் சண்டையிட விரும்பாததால் லெபனானுக்கு தப்பிச் சென்றதால் ராணுவ வீரர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தாலும் எந்த திசையிலும் இருந்து உதவி இல்லாமல் மன உறுதியை இழந்திருந்தது கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
அல்-கோலானி
கிளர்ச்சிக் கூட்டணியின் முக்கிய தலைமையாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு செயல்பட்டது. முந்தைய காலங்களில் அல்-கொய்தாவுடனான தொடர்பை பேணி வந்த அமைப்பே இந்த HTS .

அல்-கோலானி
இந்த அமைப்பின் தற்போதைய தலைவரான அபு முகமது அல்-கோலானி திட்டத்தின் பேரிலேயே கடந்த வாரம் இந்த முழு அளவிலான தாக்குதல் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் கோலானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

HTS
துருக்கியின் கை
துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையில் துருக்கியின் பங்கு உள்ளதாகவும் அரசியல் அரங்கில் அனுமானங்கள் எழுந்துள்ளன. ஆனால் துருக்கி வெளியுறவு துணை அமைச்சர் நுஹ் யில்மாஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

குஷியில் இஸ்ரேல்
பஷர் அல் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியில் மற்றொரு வெற்றியாளர் இஸ்ரேல். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஈரான், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை வழங்கிய பாதையைத் தடுத்துள்ளது.
ஏற்கனவே பலவீனமான ஹிஸ்புல்லாவை இப்போது இஸ்ரேல் அதிக பலத்துடன் அழிக்க முடியும். கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சிரியா முழுவதும் அபாயகர ஆயுதங்கள் இருக்கும் இலக்குகளை அழித்து அவை கிளர்ச்சியாளர்கள் வசம் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மற்றொரு புறம் ரஷிய ஆதரவு ஆசாத்தை ஒழித்துக்கட்ட மேற்கு நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்து உதவியதாகவும் அரசியல் அரங்கில் கருத்து நிலவுகிறது.
- விபத்து பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.
- அவசர கால பணியாளர்கள், பத்திரிகையாளர்களும் பலியாகினர்.
இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் தீயணைப்புப் படையினர் மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மற்றொரு பேருந்து மோதியது.
இதையடுத்து இரு விபத்துக்களிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.
இதில் அவசர கால பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பலியாகினர். காயமடைந்த 29 பேரில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.
அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுக்கு உதவ அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றன.
அதன்பின்னர் அமெரிக்க படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். அமெரிக்க படைகள் வருகைக்கு பிறகு அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்தனர்.

இதற்கிடையே தாங்கள் பயங்கரவாதக் குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடங்க உள்ளதாக அண்டை நாடான துருக்கி அறிவித்தது. இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.
சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக துருக்கி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என்றும், 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயம், துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் குர்துக்கள் நடந்துகொள்வதை விரும்பவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என தெரிகிறது. #Trump #SyrianKurds

அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.
ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது.

இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “பல்லாண்டு காலம் அமெரிக்கா மூலம் துருக்கி பலன் அடைந்து உள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அந்த அப்பாவி மனிதரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். ஆனால் நாங்கள் துருக்கி மீது மீண்டும் நடவடிக்கை எடுப்போம்” என கூறி உள்ளார். எனவே துருக்கியில் இருந்து இறக்குமதி செய்கிற மேலும் பல பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. #USTurkeyClash