என் மலர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- உக்ரைன் ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை.
- 30 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷியா புதிய ராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- புதின் உடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் உடனான போர் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில் நாளை ரஷிய அதிபர் புதின் உடன் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது "செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புதின் உடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன். கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம்" என டிரம்ப் தெரிவித்தார்.
கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வோம் என ரஷியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
- இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.
கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அதிபர் புதின், இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.
ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.
- உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
- இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.
மாஸ்கோ:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:
போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஓர் உன்னதமான பணியாகும்.
போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவித்தார்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 ஆண்டுகளை கடந்துள்ளது.
- டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது.
இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும், அதிபர் புதின்- அதிபர் டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷியாவும் பல்வேறு நிபந்தனைகளுடன் உடன்பட்டுள்ளார். எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு திடீரென ரஷியா எல்லைக்குள் புகுந்த உக்ரைன் ராணுவம் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல இடங்களை பிடித்தது.
- உக்ரைன் பிடித்த இடங்களை மீட்க ரஷிய ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென எல்லையில் உள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்திற்குள் உக்ரைன் ராணுவம் புகுந்தது. குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களை உக்ரைன் பிடித்தது.
இது படையெடுப்பு அல்ல. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், ரஷியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கும் உதவியாக இருக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இதனால் கோபம் அடைந்த புதின், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கைவசப்படுத்திய இடங்களை மீட்க ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்திற்கு எதிராக ரஷியா கடுமையாக போரிட்டு வந்தது. உக்ரைனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பகுதியை மீட்டு வருதாக ரஷியா தெரிவித்தது.
இந்த நிலையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா என்ற மிகப்பெரிய நகரை உக்ரைன் ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளோம் என ரஷியா தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் பிடித்துள்ள கடைசி இடத்தில் இருந்தும் அவர்களை விரட்டுவதற்காக ரஷியா ராணுவம் நெருங்கி வருகிறது என அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த தகவலை ரஷியா வெளியிட்டுள்ளது.
ரஷிய அதிபர் புதின் புதன்கிழமை (நேற்று) இந்த குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ தலைமையகம் சென்றிருந்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.
- அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
- உக்ரைன் மீதான ராணுவ உதவிக்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது மோதிக் கொண்டதால், அமெரிக்க உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளை நிறுத்தியது. அத்துடன உளவுத்துறை தகவல் பகிர்வதையும் நிறுத்தியது.
இந்த நிலையில்தான் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ரஷியா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இதற்கிடையே உக்ரைன் மீதான ராணுவ உதவிகள் மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு ஆகியவற்றிற்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்த நிலையில் புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பின் பிப்ரவரி 12-ந்தேதி புதின் உடன் டெலிபோனில் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இரு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை.
- நாசகார ஆயுதம் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டியது.
- அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆய்வு செய்தார்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி 8 மாதங்கள் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷியா, தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை.
இதற்கிடையே உக்ரைன் அணுமின் நிலையங்களில் அணுக் கழிவுகளை பயன்படுத்தி நாசகார ஆயுதங்களை அந்த நாடு தயாரித்து வருவதாகவும், அதன் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. அத்துடன் ரஷியாதான் அப்படிப்பட்ட நாசகாச ஆயுதங்களை தயாரிப்பதாக எதிர்குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் உக்ரைன் படைகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் ரஷிய சிறப்பு படைகள் பயிற்சியை தொடங்கின. நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்.
தரை, கடல் மற்றும் வான் பாதுகாப்பு மற்றும் தடுப்புப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கிரெம்ளின் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள பேரண்ட்ஸ் கடலில் இருந்து சினேவா பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்த, நீர்மூழ்கிக் கப்பல் குழு தயாராகும் காட்சிகளை ரஷிய அரசு ஊடகம் வெளியிட்டது. கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இருந்து ஏவுகணைகளை சோதனை செய்வதும் இந்த பயிற்சியில் அடங்கும். ரஷிய படைகளின் இந்த ஒத்திகையின்மூலம், உக்ரைன் போர் அணு ஆயுத மோதலாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார்.
- ரஷிய போரில் அமைதிக்கான ஒரே வழி உக்ரைனுக்கு உதவுவதுதான் என மெலோனி தெரிவித்தார்.
ரோம்:
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மெலோனியின் கூட்டணி கட்சிகள் ரஷிய அதிபர் புதினுடனான நட்பு காரணமாக போர் விவகாரத்தில் தெளிவற்று இருந்த போதிலும், பிரதமர் மெலோனி பலமுறை உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
- இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 8 மாதத்தைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.
ரஷியாவும், ரஷியப் படைகளும் இந்த நாட்டின் குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது ஏவுகணைகள் மற்றும் ஈரானிய ஆளில்லா விமானங்களை பொழியும் இந்த இக்கட்டான தருணத்தில் வான் பாதுகாப்பின் தீவிரத் தேவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கீவ்வில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 9 மாதங்கள் ஆகின்றன.
- ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
டெஹ்ரான்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 9 மாதங்களாகின்றன. கடந்த சில வாரங்களாக ரஷியா வெடிகுண்டு டிரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்களில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய மின்நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியா தாக்குதலுக்கு பயன்படுத்தி வரும் டிரோன்கள் ஈரானால் ரஷியாவுக்கு வழங்கப்பட்டவை என அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் ஈரான், ரஷியாவுக்கு தொடர்ந்து டிரோன்களை வழங்கி வருவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தது.
இந்நிலையில், ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் கூறுகையில், ரஷியாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிரோன்களை வழங்கினோம். ஆனால் உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே அவற்றை வழங்கினோம். ரஷியா உக்ரைனில் ஈரான் டிரோன்களை பயன்படுத்தியதற்கான ஏதேனும் ஆவணங்கள் அவர்களிடம் (உக்ரைன்) இருந்தால், அவர்கள் அவற்றை எங்களிடம் வழங்க வேண்டும். உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரான் டிரோன்களை ரஷியா பயன்படுத்தியது என்பது நிரூபிக்கப்பட்டால் இந்த விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.
- மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி.
- 1.5 கிமீ வரை மின் கம்பிகளை ரஷிய படைகள் அகற்றி விட்டதாக புகார்.
கீவ்:
ரஷியா உக்ரைன் இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்தநிலையில், உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்து வருவதுடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
அந்த நகரத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது உக்ரைனின் நாசவேலை என்ற ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஷிய படையினர் 1.5 கிமீ மின் கம்பிகளை அகற்றி விட்டதாகவும், உக்ரைன் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.