என் மலர்
நீங்கள் தேடியது "UP Warriorz"
- டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
- கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
- குஜராத் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
- உ.பி. அணியின் தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 88 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வோல்வார்த் 30 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். உ.பி. வாரியர்ஸ் அணியின் எக்லேஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 4 ரன்னிலும், கிரண் நவ்கிர், சமரி அட்டப்பட்டு ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த தீப்தி சர்மா ஒருபுறம் நிற்க அதன்பின் வந்த கிரேஷ் ஹாரிஸ் 1 ரன்னிலும், ஷ்வேதா ஷெராவத் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்த உ.பி. வாரியர்ஸ் 35 ரன்கள் எடுப்பதற்குள் 5 விககெட்டுகளை இழந்தது.
6-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மா உடன் பூனம் கெமர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தீப்தி சர்மா 60 பந்தில் 88 ரன்களும், பூனம் கெமர் 36 பந்தில் 36 ரன்களும் ஆட்டம் இழக்காமல் எடுத்த போதிலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
அந்த அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி, உ.பி. வார்யர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
ஆர்சிபி இன்று மும்பையை எதிர்கொள்கிறது. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நாளை டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று, ஆர்சி இன்று தோல்வியடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் முன்னேறும்.
இன்று ஆர்சிபி வெற்றி பெற்று, நாளை குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றால் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ ஆகிய இரண்டு அணிகள் ஒன்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியடைந்தால் ஆர்சிபி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
- யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
- அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சினெல்லா ஹென்றி அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025-க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி யுபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சினெல்லா ஹென்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி இத்தொடரில் இருந்து விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலியாவுக்காக 5 டி20 சர்வதேச போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிம், ஆஸ்திரேலியாவுக்காக 59 டி20, 56 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மேலும் டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய உ.பி. வாரிர்யஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்னும், உமா சேத்ரி 24 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், டாடின், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.
ஹர்லீன் தியோல், டாடின் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிபெற வைத்தது.
இறுதியில், குஜராத் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்லீன் தியோல் 34 ரன்னும், டாடின் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீராங்கனை கிரண் நவ்கிரே அதிரடியாக ஆடி 27 பந்தில் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ஷ்வேதா ஷெராவத் 37 ரன்னும், சினெல் ஹென்ரி 33 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 26 ரன்னில் வெளியேறினார்.
அனபெல் சதர்லேண்ட்-மரிஜானே காப் ஜோடி பொறுப்புடன் ஆடியது.
இறுதியில், டெல்லி அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. சதர்லேண்ட் 41 ரன்னும், மரிஜானே 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சினேலி ஹென்றி அதிரடியாக ஆடி 23 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து அவுட்டானார்.
டெல்லி சார்பில் ஜெஸ் ஜோனாசென் 4 விக்கெட்டும், மரிஜான் காப், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போராடி அரை சதம் கடந்தார்.
கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய கிரேஸ் ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நடப்பு தொடரில் உபி வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உ.பி.வாரியர்ஸ் அணி சார்பில் கிரேஸ் ஹாரிஸ், கிராந்தி கவுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்னும், விரிந்தா தினேஷ் 33 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் நாட்-சீவர் பிராண்ட் 3 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. யஸ்திகா பாட்டியா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஹைலே மேத்யூஸ், நாட்-சீவர் ப்ரண்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினர் . இருவரும் அரைசதம் கடந்தனர். ஹைலே மேத்யூஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் நட் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், மும்பை அணி 17 ஓவரில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.
- மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜியா வோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இத்தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த மும்பை அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய ஜார்ஜியா வோல் அரை சதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்னும், தீப்தி ஷம்ரா 27 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி அமெலியா கெர் 5 விக்கெட்டும், ஹெய்லி மேத்யூஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ஹெய்லி மேத்யூஸ் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு ஹெய்லி மேத்யூஸ்-நட் சீவர் பிரண்ட் ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. நட் சீவர் பிரண்ட் 37 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4வது வெற்றி ஆகும்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
- அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களுரு பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜார்ஜியா வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேகனா 12 பந்தில் 27 ரன்னும், எல்லீஸ் பெரி 28 ரன்னும், ராக்வி பிஸ்ட் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிச்சா கோஷ் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஸ்னே ரானா 6 பந்தில் 26 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், பெங்களூரு அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் உ.பி.வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உ.பி.வாரியர்ஸ் பெற்ற 3வது வெற்றி ஆகும்.