என் மலர்
நீங்கள் தேடியது "vaikasi visakam"
- வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- இந்த திருவிழா ஜூன் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்குகிறது. 10-ம் திருவிழாவான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.
இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வைகாசி விசாக வசந்த திருவிழா 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 1-ந்தேதி, 3-ந்தேதி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
முன்னதாக வைகாசி விசாக வசந்த திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு வைத்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.
10-ம் நாளான வருகிற 2-ந்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார்.
அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடை பெறுகிறது.
பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார்.
இதேபோல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான வருகிற 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஜூன் 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- ஜூன் 2-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து முதல் நாள் விழாவான 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம்(ஜூன்)1-ந்தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம், கஞ்சிதர்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதல் நடக்கிறது.
10-ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இன்று கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
- 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நாகர்கோவில், கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக விவேகானந்தபுரத்துக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள். நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
- விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றப்பட்டு 17 நாட்கள் நடைபெறும். இதையொட்டி தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்றம் பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்குரதவீதி வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விழா, சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
- இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன.
- 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இதற்கான விழா நேற்று 23-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்று காலை 5 மணி அளவில் கணபதி வழிபாடு, விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று, அன்று மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற்றன.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வேண்டுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று(புதன்கிழமை) சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு 7 மணிக்கு மேல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற உள்ளன.
தொடர்ந்து 2-ந்தேதி காலை 7.20 மணிக்கு மேல் பால்குடம், காவடி, ரதகாவடி, சிலாகைக் காவடி, பறவை காவடி, மயில் காவடியும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளன. 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர்கள் நா.சி.அ. சிதம்பரநாதன் ஆச்சாரி, மீ.ச. லோகநாதன் ஆச்சாரி ஆகியோர்கள் தலைமையில் கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் யோகேஸ்வரன், உதவி தலைவர் நாகநாதன், செயலாளர் பாலமுருகன், உதவிச்செயலாளர் செல்வ முனிஸ்வரன், பொருளாளர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் இளைஞர்கள் செய்து வருகிறார்கள்.
- 1-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.
உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க, வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும்.
சிறப்பு வாய்ந்த இத்திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது.
7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- இந்த திருவிழா ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது
- மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார்.
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் டிரஸ்டி முருகபெருமாள் முன்னிலையில் கொடிப்பட்டம் மரபுபடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி ரட்சகர்தெரு கைலியார் குடும்பத்தை சேர்ந்த கெனி என்பவர் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மேவாளர் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்த கொடிமர பூஜைகளை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் கோவில் வேல்சாந்திகள் விட்டால் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி, கண்ணன் போற்றி, நிதின் சங்கர் போற்றி,கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி ஆகியோர் நடத்தினார்கள்.
மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த திருவிழா அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமயஉரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- தினமும் லட்சார்ச்சனையும், சகல பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
- 2-ந் தேதி வைகாசி விசாகம் திருவிழா நிறைவு பெறுகிறது.
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவானது நேற்று அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது. இதில் மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்பு கட்டி பூஜைகள் தொடங்கியது.
இதை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க சண்முகர்சுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு மகா அபிஷேகம், லட்சார்ச்சனைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து இந்த திருவிழாவில் தினமும் லட்சார்ச்சனையும், மாலையில் சகல பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வைகாசிவிசாகம் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.
இந்த திருவிழா தொடங்கியதையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, சென்னை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். இந்த திருவிழாவின் போது நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி வந்து அங்குள்ள ராக்காயி அம்மனையும் தரிசனம் செய்தனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 2-ந்தேதி குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
தக்கலைக்கு அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. குமரபருவத்தில் வேளிமலைக்கு வந்த முருகபெருமான் வள்ளிதேவியை காதலித்து திருமணம் செய்ததாக ஐதீகம். எனவே, இந்த கோவிலில் குடிகொண்டுள்ள முருகபெருமான் குமாரசாமி என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு தீபாராதனையும், அதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு தந்திரி அத்தியறமடம் நாராயணரு ராமரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.40 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகனகுமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், கோவில் திருவிழா கமிட்டி காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலையில் ஸ்ரீபூதபலி, கலசபூஜை, கலச அபிஷேகம், காலை மற்றும் இரவில் சாமியும், தேவியும் பூப்பல்லக்கு, மயில், கிளி ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் வருகிற 31-ந்தேதி இரவு 9 மணிக்கு சாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
9-ம் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமியும், தேவியும் ஒரு தேரிலும், கணபதி மற்றொரு தேரிலும் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் நாளான 2-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.
- திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.
- 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவும், மற்றொரு நாள் மொட்டையரசு உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டிற்கான விசாகத்திருவிழாவின் தொடக்கமாக நேற்று வசந்த உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பபட்டு தயாராக இருந்த மேடையில் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனையடுத்து அம்பாளுடன் சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீப தூபஆராதனையும் நடந்தது.
வருகிற 1-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த நிகழ்ச்சி நடக்கிறது.
2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாகொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் எழுந்தருளுகிறார்.இதனையடுத்து சண்முகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.
இதுதவிர இளநீர் காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
- 28-ந்தேதி 9 கருட சேவை நடக்கிறது.
- 1-ந் தேதி தேரோட்டம் நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதிகளில் 9-வதும், குருவுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஆதிநாதா்ஆழ்வாா் கோவில் ஆழ்வாா்திருநகரியில் அமைந்துள்ளது. இங்குதான் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி விசாகம் அன்று அவதரித்தார். ஆண்டுதோறும் வைகாசி நட்சத்திர அவதார திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி நம்மாழ்வாா், கொடிமரத்திற்கு முன்பாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நகா்வலம் வந்த கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அதன் பின்னா் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகின்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 5-ம் திருநாளான 28-ந் தேதி காலையில் நவதிருப்பதி பெருமாளுக்கு மங்களாசாசனமும், இரவில் 9 கருட சேவையும் நடைபெறுகின்றது. சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.