என் மலர்
நீங்கள் தேடியது "valentines day"
- பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
- சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும் உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டம் மாறுபடுகிறது. சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு தேதியில் கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள். காதலர் தின பரிசு பொருட்களும் வித்தியாசப்படுகிறது. அத்தகைய காதலர் தின கொண்டாட்டம் பற்றி பார்ப்போம்.
சீனா
சீனாவில் கொண்டாடப்படும் `கியூஸி' திருவிழா காதலர் தினத்திற்கு இணையாக கருதப்படுகிறது. அதனையே அந்நாட்டு மக்கள் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். இது அந்நாட்டு காலண்டரில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளில் வருகிறது. அதாவது ஆகஸ்டு மாதம் சீனாவின் காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் இளம் பெண்கள் ஜினு என்னும் தெய்வத்திற்கு பழங்களை பிரசாதமாக படைத்து, தனக்கு நல்ல துணைவனை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகிறார்கள். திருமணமான தம்பதியர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள்.
இங்கிலாந்து
பிப்ரவரி 13-ந் தேதி இரவு இளம் பெண்கள் தலையணையின் நான்கு மூலைகள் மற்றும் மத்திய பகுதி என ஐந்து பிரியாணி இலைகளை வைத்தபடி தூங்குவார்கள். தங்கள் வருங்கால கணவனைப் பற்றிய கனவுகள் வருவதற்காக இந்த முறையை பின்பற்றுகிறார்கள். திருமணமான தம்பதியர் பிப்ரவரி 14-ந் தேதி ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறி காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள். இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபடி தங்கள் காதல் உணர்வுகளை பரிமாறிக்கொள்வார்கள்.
பிரேசில்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாரம்பரிய திருவிழா நடத்தப்படுவதால் அங்கு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு மாற்றாக ஜூன் 12-ந் தேதி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அப்போது சாக்லெட்டுகள், வாழ்த்து அட்டைகள், பூக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்கிறார்கள்.
கானா
கோகோ ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் காதலர் தினத்தை சாக்லெட்டுடன் தொடர்புபடுத்திவிட்டார்கள். 2005-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14-ந் தேதி அங்கு சாக்லெட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு சாக்லெட் மற்றும் கோகோ பொருட்களை பரிமாறி மகிழ்கிறார்கள்.
இத்தாலி
இத்தாலியர்கள் காதலர் தினத்தை பரிசு பரிமாற்றங்களுடன் கொண்டாடுகிறார்கள். அங்கு பிரபலமான காதலர் தின பரிசுகளில் ஒன்று பாசி பெருகினா. இதுவும் ஒருவகை சாக்லெட்தான். அதில் சில நட்ஸ் வகைகள், பால் பொருட்கள் கலந்திருக்கும். அதனுடன் காதல் வாசகங்கள் அச்சிட்டப்பட்ட வாழ்த்து அட்டையை பரிசாக வழங்குகிறார்கள்.
அர்ஜெண்டினா
இங்கு வசிப்பவர்கள் பிப்ரவரியில் காதலர் தினத்தை பாரம்பரியமாக கொண்டாடு வதில்லை. அதற்கு பதிலாக, ஜூலை மாதம் கடைப்பிடிக்கப்படும் `சுவீட் வீக்' எனப்படும் இனிப்பு வாரத்தில் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பரிசுப் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகளை காதலர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்.
தைவான்
தைவானில், பிப்ரவரி 14-ந் தேதி மட்டுமின்றி ஜூலை 7-ந் தேதியும் ஆண்கள் பெரிய பூங்கொத்துகளை காதல் பரிசாக வழங்குவார்கள். இளம் பெண் ஒருவர் 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை பரிசாக பெற்றால் அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் என்று அர்த்தம்.
பின்லாந்து
பின்லாந்தின் காதலர் தினம் ஆண்-பெண் இருபாலருக்கானது அல்ல. தங்கள் நண்பர்களுடன்தான் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாட்டு மொழியில் இந்த நாள் நண்பர்களின் தினம் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பான்
ஜப்பானிய இளம் பெண்கள் பிப்ரவரி 14 அன்று தங்களுக்கு பிடித்தமான ஆண் தோழர்களுக்கு பரிசுகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்குகிறார்கள். அதன் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தோழமையுடன் பழகும் ஆண் நண்பர்களிடத்தில் தங்களுக்கு காதல் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலான சாக்லெட்டுகளும் பரிமாறப்படுகின்றன. அன்றைய தினம் ஆண்கள் பரிசு பொருட்கள் எதுவும் வழங்குவதில்லை. ஒரு மாதம் கழித்து மார்ச் 14-ந் தேதியை ஜப்பானிய ஆண்கள் காதலர் தினமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்கா
உலகின் பல பகுதிகளைப் போலவே, தென் ஆப்பிரிக்காவில் அன்பின் அடையாளமாக மலர்களை பரிசளித்து காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பெண்கள் தங்கள் காதலர்களின் பெயர்களை தாங்கள் அணியும் ஆடையில் பதிக்கும் வழக்கமும் இருக்கிறது.
பிலிப்பைன்ஸ்
இங்கு பிப்ரவரி 14-ந்தேதி காதலர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாளாக அமைந்துவிடுகிறது. காதலர் கள் அனைவரும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒன்றாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
அமெரிக்கா காதலர்கள், திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு பரிசுகள் வழங்கி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், சாக்லெட்டுகள், மலர்கள் என இவர்களின் காதல் கொண்டாட்டம் முடிந்துவிடுவதில்லை. நகைகளை பரிசளிக்கும் வழக்கமும் இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் காதலர் தினத்தன்று சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அங்கு பணம் புழங்குகிறது.
ஜெர்மனி
ஜெர்மனியில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றன. எனவே காதலர் தினத்தில் பன்றி சிலைகளை பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு பன்றி உருவம் பொறித்த பொம்மைகள், சிற்பங்களை வழங்குவதுடன் சாக்லெட்டுகள் மற்றும் மலர்களையும் பரிமாறுகிறார்கள்.
- அமேசான் வலைதளத்தில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டேப்லெட், என ஏராளமான பிரிவுகளில் மின்சாதனங்கலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
காதலர் தினத்தை ஒட்டி அமேசான் வலைதளத்தில் Fab Phones Fest Sale அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் ரூ. 77 ஆயிரத்து 899 முதல் கிடைக்கிறது. இதில் அனைத்து சலுகை மற்றும் வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்ஃபிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகளை சேர்த்து ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் ரக்கட் மாடல் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்கள் பிரிவில் போட் ஏர்டோப்ஸ் 141 மாடல் ரூ. 1,099 விலையிலும், ஜெபிஎல் வேவ் 200 மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையிலும், நாய்ஸ் பட்ஸ் VS201 V2 மாடல் ரூ. 999 விலையிலும் சென்ஹெய்சர் IE 100 ப்ரோ இன்-இயர் வயர்டு இயர்போன் ரூ. 6 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. சியோமி பேட் 5 மாடல் ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் ரியல்மி பேட் வைபை 4ஜி டேப்லெட் மாடல் ரூ. 17 ஆயிரத்து 189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வங்கி சலுகைகள்:
ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளில் பத்து சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீத தள்ளுபடி அல்லது அதிகபட்சம் ரூ. 1250 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வங்கி தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகளில் சேர்க்கப்படுகிறது. விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Source: fonearena
- காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
- 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
காரைக்குடி:
உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருடந்தோறும் நூதன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.
காதலர் தினமென்ற பேரில் பொது இடங்களில் சில காதலர்கள் தகாத செயல்களை செய்கின்றனர். இதனை கண்டித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
- புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.
காதலர் தின ஆஃபர் விவரங்கள்:
ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.
இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.
- ஸ்டோய்னிஸ் கன்னத்தில் ஜாம்பா முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
- ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கெளரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜாம்பா ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
- ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.
மதுரை:
பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் வருடந்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். அதன்படி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்து இருந்தது. இதையொட்டி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, சுந்தரம் பார்க், நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை தொண்டர்களுடன் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கம்-பண்பாட்டுக்கு காதலர் தினம் எதிரானது. எனவே அதனை இளைஞர்கள் கொண்டாடக்கூடாது. புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி இன்று காலை ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஆதரித்து இனிப்பும் வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது.
- திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.
உதய்பூர்:
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்துக்கொண்டார். இதே போல மற்றொரு ஸ்டார் வீரர் அக்ஷர் பட்டேலும் திருமணத்தை நடந்தி முடித்தார்.
இந்நிலையில் தான் இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறாராம்.
ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020-ம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் தற்போது பிரமாண்ட திருமணத்திற்கு ஆசைப்பட்டுள்ளனர்.

இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது. இதனால் நண்பர்கள், உறவினர்கள் யாரையும் பெரியளவில் அழைக்க முடியாமல் மிகவும் எளிமையாக செய்துவிட்டனர். எனவே காதலர் தினமான இன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இந்திய வீரர்கள் எவ்வித போட்டியும் இல்லாமல் உள்ளனர் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

2-வது முறையாக திருமணம் என்றாலும் அது சாதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஏனென்றால் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு திரைப்படங்களில் காட்டப்படுவதை போல பல கோடிகள் செலவில் மிகப்பெரிய வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
பாண்ட்யாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் பலமான விருந்து பரிமாரப்படவுள்ளது. அவர்களுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் உயரிய உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
- மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் லூனா நகரத்தின் மேயர் மாட் புளோரிடோ காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தி உள்ளார். சிங்கிள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக மேயர் தனது பாராட்டுக்களுடன் போனசும் வழங்கியுள்ளார்.
குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும், மற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது. அல்லது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மேயர் மாட் புளோரிடோ கூறுகையில், " காதலர் தினத்தன்று சிங்கிள்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களின் நிலையை உணர்கிறேன். காதலர் தினத்தன்று யாரும் அவர்களுக்கு சாக்லேட், பூக்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகையை வழங்க நினைத்தோம். இதன் மூலம்,யாராவது தங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள், யாரோ தங்களை நேசிக்கிறார்கள் என்பதை அவர்களால் உணர முடியும்" என்றார்.
மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார். 289 டவுன்ஹால் ஊழியர்களில், 37 பேர் தாங்கள் சிங்கிள் தான் என்பதை உறுதி செய்த பிறகு இழப்பீட்டிற்கு தகுதி பெற்றனர். மேலும், தகுதியான ஊழியர்களிடம் அவர்களது கடைசி உறவு, பிரிந்ததற்கான காரணம் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் தனிமையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
- தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
- ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் சுமித் இடம் பெற்று உள்ளார்.
ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18-ம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் சுமித் வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
டுவிட்டரில் அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...! உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், அவர் டேக் செய்தவர் தான் தவறு. ஸ்டீவ் சுமித்தின் மனைவி டேனி வில்லீஸ் (Danielle Willis நிக் நேம் Dani), Dani_willis இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் தான் இருக்கிறார். இதனை சற்றும் யோசிக்காத ஸ்டீவ் சுமித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனது கணவரை பார்ப்பதற்காக டேனி வில்லீஸ் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.
- சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிடலாம்.
இங்கிலாந்தில் உள்ள மிக பழைமையான சிறை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் இந்த சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.
காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை காதலர் தினத்தை சிறப்பாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது. இங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம்.

சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம் என துவங்குகிறது. இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னர் செல்லலாம். இதற்கான கட்டணம் 230 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
காதலர் தினத்தை ஒட்டி மிக பழமையான வளாகத்தில் உள்ள ஆறு பிரத்யேக லொகேஷன்களில் ஒன்றை தேர்வு செய்து காதலர்கள் அங்கு தங்களது நேரத்தை செலவழிக்கலாம்.
- காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
- மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.
பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இறு காதலர் தினம்.
உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதன்படி இன்று காதலர்கள் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றில் திரண்டு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காதலர் தினத்தில் தங்களது மனதை கொள்ளை கொண்ட மங்கையர்களுக்கு பிடித்தமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த வாலிபர்கள் பலர் இந்த நாளை மறக்க முடியாத நாளாக எப்போதும் மனதில் வைத்திருக்கும் வகையிலும் பல்வேறு மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபட்டனர்.
இப்படி காதலர் தினத்தைப் பற்றி ரசனையோடு சொல்லிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் நேரில் பார்த்து பழகி காதலிப்பவர்களுக்கு மத்தியில் பார்க்காமலேயே ஆன்லைனில் பழகி காதலிப்பவர்களும் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.

ஆனால் இதுபோன்ற காதல் கடைசியில் மோசடி காதலாகவே முடிந்து விடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். டேட்டிங் செயலிகள் மூலமாக பேசி பழகுவது என்பது இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் ஒருவித போதையாகவே மாறிப் போய் இருக்கிறது.
டேட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாக பெண்களுக்கு வலை விரிப்பதற்காகவே ஒரு கும்பல் இணைய தளங்களை 24 மணி நேரமும் பயன்படுத்தி வருகிறது.
அதே நேரத்தில் பெண் குரலில் பேசி வாலிபர்களை மயக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு பின்னர் சுங்கஇலாகா அதிகாரி போல பேசி மிரட்டி பணத்தை பறித்து விடுகிறார்கள்.
குறிப்பிட்ட தொகையை லட்சங்களில் சொல்லி இந்த பணத்தை அனுப்பாவிட்டால் நீங்கள் சிறை செல்வது உறுதி. உங்களுக்கு வந்திருக்கும் பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளன. நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் இத்தனை லட்சங்களை நீங்கள் உடனடியாக அனுப்ப வேண்டும்.
இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வரும் என்று கூறியதைக் கேட்டு இன்று பல இளைஞர்களும் இளம்பெண்களும் லட்சங்களை வாரி இறைத்து விட்டு அதனைத் திரும்பப் பெறுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய பிறகே டேட்டிங்கில் நம்மோடு பழகிய நபர் மோசடி ஆசாமி என்பது சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கோ இளம்பெண்களுக்கோ தெரிய வருகிறது. இதனால் டேட்டிங்கில் யாருடன் பழகுகிறோம் என்பதை நேரில் சந்தித்து உறுதி செய்து கொண்ட பின்னரே தங்களது காதலை இன்றைய வாலிபர்களும் இளம்பெண்களும் தொடர வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாம் பின்னர் சந்திக்கலாம் சில மாதங்கள் என்னால் நேரில் வர இயலாது. அதன் பிறகு நாம் இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று ஆன்லைனில் பழகும் ஆணோ, பெண்ணோ கூறினால் அதனை முழுமையாக நம்பி விட வேண்டாம் என்றும் அது போன்ற நபர்கள் நிச்சயம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது டேட்டிங் செயலிகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான பெயர்களில் பல்வேறு டேட்டிங் செயலிகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகள் மூலமாகவே மோசடி பேர் வழிகள் காதலன் போலவோ அல்லது காதலி போலவோ போலியான புகைப்படங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக மோசடியில் ஈடுபடும் வாலிபர்கள் பெண் குரலில் பேசுவதுடன் அழகான புகைப்படங்களை டி.பி.யாக வைத்துக் கொண்டும் இளம்பெண்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுபோன்று தமிழகத்திலும் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி அதன் மூலமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்து உள்ளது. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை நம்பி பலர் ஏமாந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 26 சதவீத இந்தியர்களில் ஒருவர் இது போன்ற மோசடியை எதிர்கொண்டுள்ளார்.
காதலர் தினத்தை ஒட்டி காதலர் தின பரிசு தருவதாக கூறி மோசடி கும்பல் டேட்டிங் செயலிகள் மூலமாக வலை விரித்து இருப்பதும் அதன் மூலமாக பலர் தங்களது பணத்தை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அனைவரும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து இந்த ஆன்லைன் டேட்டிங் செயலி செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் இணையதள பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாகவே இந்த காதல் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த ஏ.ஐ தொழில்நுட்பமும் டேட்டிங் செயலிகளும் மேலும் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற டேட்டிங் செயலிகள் மூலமாக அரங்கேறும் மோசடிகள் 400 சதவீத அளவுக்கு அதிகரித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மூன்று விதமான மோசடிகளை திரை மறைவில் இருந்தபடியே மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.
ஆன்லைனில் உருகி உருகி காதலிப்பதாக கூறிவிட்டு தான் காதலிக்கும் பெண்ணுக்கு அவரது முகவரியில் பரிசு பொருள்களையும் அனுப்பி விட்டு பின்னர் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி பார்சலில் வந்திருப்பது தடை செய்யப்பட்ட பொருள் எனக் கூறி அடுத்த நிமிடமே ஆன்லைன் காதலன் வில்லனாக மாறிவிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் போலீசார். இந்த மோசடி ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க... வேறு வகையான மோசடியையும் போலீசார் குறிப்பிடுகிறார்கள்.
சில சேமிப்பு திட்டங்களை கூறி அதில் நீங்கள் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்றும் மனதுக்கு பிடித்தவர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி பின்னர் இரக்கமின்றி பழகியவர்களை அதில் சிக்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இப்படி மோசடி சம்பவங்கள் ஆன்லைனில் அரங்கேறி வரும் நிலையில் பல பெண்கள் தங்களது கற்பையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறார்கள் என்பதே வேதனையின் உச்சமாகும். ஆன்லைன் மூலமாக பேசி பழகும் வாலிபர்கள் பலர் தங்களது வேலை முடிந்ததும் இளம்பெண்களை கழற்றி விட்டு விட்டு தலைமறைவாகிவிடும் சம்பவங்களும் அரங்கேறி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்து மோசடி பேர்வழிகள் மீது கற்பழிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படி டேட்டிங் செயலிகள் பல நேரங்களில் வேட்டு வைப்பதாகவே மாறி இருக்கின்றன.
ஆன்லைனில் காதலிப்பவரா நீங்கள்? நிச்சயம் உஷாராக இருக்க வேண்டும் என்பது சைபர் கிரைம் போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.
காதலர் தினமான இன்று யாருடன் பழகுகிறோம் என்பதை இளம்பெண்கள் பலமுறை யோசித்து பார்க்க வேண்டும் அப்போதுதான் காதல் மோசடி வலையை விரித்திருக்கும் கும்பலில் பிடியில் இருந்து தப்ப முடியும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.