என் மலர்
நீங்கள் தேடியது "Vehicle collision"
- தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
- அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி வண்ணபூபால். இவர் அவலூர்பேட்டையிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலமுருகன் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ராமநத்தம் போலீஸ் சரகம் தனியார் பள்ளி முன் இரவு சுமார் 11மணி அளவில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (28) இவர் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார். ராமநத்தம் அருகே தனியார் பள்ளி அருகில் அங்கு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்றபோது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்
- அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது
நெல்லை:
நெல்லை பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்(வயது 53). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று கங்கை கொண்டானில் உள்ள மான்கள் சரணாலயம் அருகே ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலைக்காக சென்றிருந்தார். அப்போது வேலையை முடித்துவிட்டு இரவில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு குறுக்காக நடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்படட ஷேக் அப்துல் காதர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த ஷேக் அப்துல் காதர் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்
- பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 56). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வாகனம் மோதியது
இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்ற ஜெயலட்சுமி வி.எம்.சித்திரம் பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மீது மோதிய வாகனம் எது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாஷா மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் பாஷா(50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாக னத்தில பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப் பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பாஷா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிழாவுக்காக வந்திருந்தவர் பஸ் நிறுத்தம் அருகே நின்றார். அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி பலத்த காயம் அடைந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்
விழுப்புரம்:
புதுவை தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ஜோதி (வயது 44). இவரது சொந்த ஊர் செஞ்சி அருகே மேல்சித்தாமூர் ஆகும். ஜோதி மேல்சித்தாமரில் நடைபெறும் திருவிழாவுக்காக வந்திருந்தவர் வல்லம் பஸ் நிறுத்தம் அருகே நின்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- வாகனம் மோதி 3 மாடுகள் பலியாகின.
- விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்
திருப்புத்தூர் அருகே உள்ள புதுகாட்டாம்பூரில் சாலையில் படுத்து கிடந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் ஒரு மாட்டுக்கு கொம்பு உடைந்தது.
மற்றொரு மாட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டு காயங்களுடன் தப்பித்து ஓடியது. இதனைக்கண்ட அப்பகுதிமக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த பகுதியில் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது நடந்த விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
- இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோவில் ரோடு பகுதியில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை அந்த மூதாட்டி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது.
- இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பெருந்துறை:
திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45). லாரி டிரைவர்.
இவர் சம்பவத்தன்று திருப்பூர் பகுதியில் லோடு இறக்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக லாரியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சாப்பிடுவதற்காக லாரியை பெருந்துறை சரளை அருகே ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு ரோட்டை கடந்து மறுபுறம் ஓட்டலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக முத்து மீது பலமாக மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் முத்துவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் இவர் வாகனத்தின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்
கடலூர்:
விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகை கடை ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூரை சேர்ந்தவர் முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சா லையில் சென்று கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.