என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velmurugan"

    • சேகர்பாபு பேசியதை கேட்டு முதல்வரும் தவறாக புரிந்து கொண்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
    • கவர்னர் வரும்போது பதாகை பிடித்து போராட்டம் செய்வது மட்டும் மரபா?

    சட்டசபையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். 

    முதலமைச்சர் வேண்டுகோளை அடுத்து சட்டசபை உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனுக்கு சபாநாயகர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்ற பேச அனுமதி தாருங்கள் என கேட்டது தவறா?

    * நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே எனது வாய்ப்பை மறுக்கின்றனர்.

    * நான் சொல்ல வருவதை கேட்காமல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., அமைச்சர் சேகர்பாபு என அனைவரும் எழுந்து கத்துகின்றனர்.

    * அ.தி.மு.க.வினரை காப்பாற்றுவதற்காக தான் சேகர்பாபு என்னை குற்றம்சாட்டுகிறார்.

    * சேகர்பாபு பேசியதை கேட்டு முதல்வரும் தவறாக புரிந்து கொண்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

    * அதிகபிரசங்கித்தனமாக பேசுவதாக முதல்வர் என்னை கூறியது உண்மையில் எனக்கு வருத்தம் தருகிறது.

    * தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என சட்டசபையில் பேசினேன், அது தவறாக புரிந்து கொள்ளளப்பட்டுள்ளது.

    * எனது மாநிலத்தின் கோட்டாட்சியர், தாசில்தாராக வடநாட்டுக்காரனை நான் எப்படி ஏற்க முடியும்.

    * தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் என் உயிரை தியாகம் செய்வேன் என சபாநாயகர் முன் முழக்கமிட்டேன்.

    * கவர்னர் வரும்போது பதாகை பிடித்து போராட்டம் செய்வது மட்டும் மரபா?

    * தமிழுக்காக போராடும் என்னை தகராறு செய்வதாக கூறுகின்றனர்.

    * துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கோபம் வராதபோது சேகர்பாபுவுக்கு மட்டும் கோபம் வருவது ஏன்?

    * தெலுங்கானாவை சுட்டிக்காட்டி நான் பேச முயன்றபோது என்னை தவறாக புரிந்து கொண்டனர்.

    * எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொள்கிறாய் என சேகர்பாபு ஒருமையில் பேசியதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

    • வேல்முருகனின் செயல் வேதனைக்கு உரியதாக உள்ளது.
    • வேல்முருகன் இனியும் இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டசபையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறுகையில்,

    * வேல்முருகனின் செயல் வேதனைக்கு உரியதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகனின் செயல் வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை அடுத்து சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

    * வேல்முருகன் இனியும் இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

    • பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார்.
    • மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசுகிறார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிளை கழகம் தோறும் கொடியேற்று விழா நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. விரிவாக விவாதிக்கிறார்.

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார். மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். அண்ணாநகர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர் பகுதி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் முன்னின்று செய்து வருகிறார்.

    • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடாகும். இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, இறையாண்மை எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும். பாசிச நடவடிக்கை என்பது விஷ விதை மண்ணில் புதைப்பதாகவும், ஆகையால் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இதனை எதிர்க்க வேண்டும்.

    ஆகையால் மத்திய அரசு உடனடியாக இக்குழுவை திரும்பப் பெற வேண்டும். ஒற்றை ஆட்சி முறை பேராபத்தும் பெரிய அபாயத்தையும் விதைக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக அதிமுகவினர் மிகப்பெரிய ஊழல் செய்து உள்ளனர். அதனை தற்காத்துக் கொள்வதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை ஆதரித்து உள்ளனர். அவர்கள் இந்தியாவை பாதுகாத்திட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசு 7.5 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செய்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இதில் தமிழகத்தில் 5 சுங்கசாவடியை சோதனை செய்தபோது சுமார் 128 கோடி கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடித்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

    ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக சட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை கொண்டு வந்தாலும், கொசு, காலரா ஒழித்தது போல் பாசிச தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    பேட்டியின்போது மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • தற்போதைய நிலையில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் இன்னும் கூட்டணியில் இடம் பெறுவதில் சில கட்சிகள் நழுகியும், வழுகியும் பிடி கொடுக்காமல் இருப்பதால் விட்டுப்பிடிக்கும் மன நிலையில் தலைவர்கள் இருக்கிறார்கள்.

    தற்போதைய நிலையில் பா.மக. எந்த கூட்டணியில் சேரும் என்பதில் இன்னும் தெளிவான முடிவு இல்லை. தனது கட்சியினரிடம் 'அவசரப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள்' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

    வட மாவட்டங்களை மனதில் கொண்டு பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் பா.ம.க. இடம் பெற்றால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகளும் முரண்டு பிடிக்கின்றன.

    இந்த நிலையில் இப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 'பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் நாங்கள் இடம் பெறமாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

    எனவே அப்படி ஒரு சூழ்நிலைவந்தால் வேல்... வேல்... வெற்றிவேல் என்று அ.தி.மு.க.வை நோக்கி வேல்முருகன் புறப்படுவார் என்கிறார்கள்.

    • நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
    • தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.

    சென்னை:

    விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.

    ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
    • நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.

    நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்
    • தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும்

    சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்

    தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.

    அண்மையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார்.
    • சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

    சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் காரில் வந்தார். போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார்.

    இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுப்பான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், இந்த வழியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் காரை ஓட்டி வந்த வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவி மேலாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

    இந்நிலையில் மெட்ரோல் ரெயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகர் வேல் முருகன் கைது செய்யப்பட்டார். பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசியது மற்றும் ஊழியரை தாக்கியது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்முருகன் ஜாமீனில் வந்ததது குறிப்பிடத்தக்கது.

    • அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.
    • கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.

    திமுக அரசு மீது அதன் கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.  கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * தேர்தல் வரும்போது மட்டும் முக்கியத்துவம் தரப்படும் கூட்டணி தலைவர்கள் தற்போது ஒதுக்கப்படுகின்றனர்.

    * மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எனக்கு தகவல் அளிக்கவில்லை.

    * அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா?

    * தேர்தலின்போது அமைச்சர்கள் பேசுவர்; தேர்தல் முடிந்ததும் அமைச்சரின் உதவியாளர்கள்தான் பேசுவார்கள்.

    * தமிழகத்தில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரின் கவனத்திற்கு உண்மை தகவல்கள் செல்லவில்லை.

    * அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.

    * கேள்வி கேட்டால் கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணிப்பார்கள். தேர்தலின்போது மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்.

    * திமுக ஆட்சியிலும் கூட அதிகாரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்.

    * மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

    * மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரணம் வழங்குகின்றனர்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயம்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்கள்.

    * கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.

    * சட்டசபையை குறைந்தது 10 நாட்களாவது நடத்துங்கள் என கதறினேன். ஆனால் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறினார்.

    • சட்டசபையில் தி.மு.க.வினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர்.
    • தி.மு.க.வினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபையில் தி.மு.க.வினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர்.

    என்ன பேச போகிறேன் என்பதே தெரியாமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிடுவதாக குற்றம்சாட்டிய அவர், தி.மு.க.வினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள்.
    • என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை...

    திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வேல்முருகன் பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரேயொரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    அது,

    சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம்.

    எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் எனச்சொன்னார். இதை சரியான களமாக மாற்றுங்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்.

    அனைத்து சுங்கச்சாவடிகளில் உங்க தலைமையிலான தொண்டர்களும், மக்களும் வரிக்கொடா இயக்கத்தை அறிவியுங்கள். அனைத்து தலைவர்கள் சுங்கச்சாவடிகளில் சுங்கம் தர மறுப்போம் என வரிக்கொடா இயக்கத்தை தொடங்குவார்கள்.

    2-வது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள். அதானியின் துறைமுகங்களுக்கு துணை நிற்கமாட்மோம் என சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரமாட்டோம். எனச் சொல்லுங்கள். மோடி உங்களுடைய காலடியில் மண்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை நான் பார்க்கிறேன் என்பதுதான்.

    தமிழனின் மான உணர்ச்சி, இன உணர்ச்சி, சுயமரியாதையில், தன்மானத்தில் கை வைத்துக்கொண்டே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்பதால் எவ்வளவோ பணிந்து போகிறீர்கள். எவ்வளவோ தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறோம். ஒன்றிற்கும் மரியாதை கிடையாது. கிழித்து குப்பையில் வீசுகிறார்கள்.

    பாரளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள்., மோடி அரசு, சங்கபரிவார் கும்பல்கள் நாட்டிற்கு செய்யும் அட்டூழியங்களை பாராளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.

    தமிழக வரலாற்றிலேயே கலைஞருக்குப் பிறகு தளபதி தலைமையில் உள்ள 40 எம்.பி.க்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கக் கூடியவர்கள். நம்ம ஆட்கள் கேட்கும் கேள்விகள் ஒன்றிற்கு கூட சங்கி கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை.

    நிர்மலா சீதாராமன் கதறுகிறார். அவருக்கு கோபம்தான் வருகிறது. தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே கோபம் வருகிறது என்றால்?, நல்லி எழும்பு சாம்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?.

    என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை... தானே புயல் வந்தால் பணம் இல்லை. இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பணம் இல்லை... குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர் கேட்டால், 6 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டருக்கு கண் தெரியாது என்றகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் என்னத்திற்கு ஹெலிகாப்டர்.

    நான் அதிகமாக பேசினா.. தளபதி சட்டமன்றத்தில் அழைத்து ஏன் இப்படி பேசினிங்க என கேட்பார். அதனால் ஆத்திரம் பொங்குது... கோபம் வருது... நாளைக்கு என்எல்சி-யில் வைக்கிறேன் கச்சேரி.

    இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

    ×