என் மலர்
நீங்கள் தேடியது "velmurugan"
- எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.
- 'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,
எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.
நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்." என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்ணில், பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும் என மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
- சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.
சென்னை:
சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்) மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வகுப்புவாரி பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூக நீதி தான் ஜனநாயகத்தின் ஆணி வேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பதை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதை உடனே செயல்படுத்தக்கோரி வருகிற 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். நான் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு சத்ரியன் து.வெ.வேணுகோபால் அறிக்கையில் கூறி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று காலை காரில் வந்த போது மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அச்சிறுப்பாக்கம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் இதுபற்றி சுங்கச்சாவடி ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீது கொலை மிரட்டல், ஆபாச பேச்சு, காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் வேல்முருகனின் கார் டிரைவர் பாஸ்கரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #Velmurugan
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை கார் மூலம் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். டிரைவர் பாஸ்கர் காரை ஓட்டினார்.
மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியை கார் கடந்தபோது அங்கிருந்த ஊழியர்களுக்கும், டிரைவர் பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து வேல்முருகன் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.
வடலூர், மார்ச்.11-
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் வடலூரில் நடைபெற் றது.
கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் செல்போன் மூலமாக அவர் பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் என்னால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும். ஒரு சீட்டுக்காக யாரிடமும் விலை போக மாட்டேன். தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறி னார். பின்னர் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் கமிட்டி தலைவர் ஜம்புலிங்கம், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார், நகர செயலாளர் அய்யப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எனதிரி மங்கலம் கிராமத்தில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபடுவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதாகவும் உடனடியாக மணல் குவாரியை மூட கோரி அந்த பகுதி பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில்நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், அரசு உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம், அவரது வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை எனில் தலைமை செயலகம் மற்றும் முதல்வர் பழனிசாமி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அதன் பின்பும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்றத்தில் சிறந்த நீதிபதியின் பார்வைக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்படும் என்றார்.
மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட பலர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் வேல் முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசினார்.
அவரது பேச்சை அடிப்படையாக வைத்தே திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
நாகர்கோவில்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக அவர் கையெழுத்து போட்டார். அப்போது அவரை வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அதன்பின் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் ரீதியாக மக்களை சந்திப்பதற்கு தமிழக அரசு பயப்படுகிறது. இந்த ஆட்சியில் மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் விரோத ஆட்சியாக தற்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது.
மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். தேர்தல் வந்தால் எந்த சாதனையை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டெல்டா விவசாயிகள் தற்கொலை, ஒகி புயலால் மீனவர்கள், விவசாயிகள் பாதிப்புபோன்றவற்றை அவர்களால் சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை. பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபம் அடைந்துள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு துரோகம் செய்து விட்டது. இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் காத்து கிடந்த பலர் உயிரை விட்டனர்.
தமிழகத்தில் சொந்த நாட்டிலேயே மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்கும் மக்களின் அழுகுரல், கூக்குரல் தான் கேட்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி 150 அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #velmurugan #tngovernor #tnchiefminister
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர். இதில் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுபோல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் போலீசார் அவரை கைது செய்து சென்னை ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்த வேல்முருகனுக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் நாகர்கோவிலில் தங்கி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து வேல்முருகன் நாகர்கோவில் வந்தார். கோட்டார் போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எங்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது எனக்கு அந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது.
அதன்பிறகு 4 நாட்களுக்கு பிறகு என்னை கைது செய்தனர். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த என்னை விமான நிலையத்தில் தடுத்து கைது செய்தனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் துவண்டுவிட மாட்டேன். பொதுமக்களுக்காக என்னுடைய போராட்டம் தொடரும்.
நான் ஜெயிலில் இருந்த போது திண்டுக்கல்லில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜெயிலில் இருந்த என் மீது வழக்கு போடப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டு என்னை கைது செய்ய தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் போராட்டம் நடத்தும் பாரதிராஜா, சீமான், டைரக்டர் கவுதமன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல.
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அங்கு 99.99 சதவீதம் மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதாகத்தான் கூறுவார்கள். ஆனால் முதல்-அமைச்சர் முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்.
இப்போது முதல்-அமைச்சராக இருப்பதால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் வருகிறார். பதவி இழந்தால் இவர் மக்களை சந்திக்க வர வேண்டும். தேர்தல் வரும் போதும் மக்களிடம்தான் வர வேண்டும். அப்போது மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
கவர்னர் அவரது அதிகாரத்தை மீறி ஆய்வு நடத்தி வருகிறார். இதை தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தைரியமானவர்கள். எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மன வலிமை கொண்டவர்கள். கவர்னரின் மிரட்டலையும் அவர்கள் எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது.
அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும், கடலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Velmurugan #HighCourt