என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • ரோகித் சர்மாவுக்கு 35 வயதும், விராட் கோலிக்கு 33 வயதும் ஆகிறது
    • கேப்டன் பதவிக்கு பாண்ட்யா, ராகுல், பண்ட் ஆகியோரில் ஒருவரை நியமிக்க திட்டம்

    ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கும். இந்திய அணியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ விரும்புகிறது. மேலும், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது.

    ஆகவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப்பின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. விராட் கோலிக்கு மிகப்பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்படும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளதாக செய்தி நிறுவனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

    அந்த செய்தியில் வெளியான தகவல் பின்வருமாறு:-

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் விரிவாக கலந்துரையாடுவார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள்.

    ஆனால், அவர்கள் இருவரும் 35 வயதை தொடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இருவரும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள். தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவை. ஆனால், ஒரு கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது.

    டி20-யில் கவனம் செலுத்த முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பதவிக்கு தயாராகும்போது, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.

    அதேபோல் விராட் கோலியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும்.

    பிசிசிஐ-யின் திட்டம்

    1. ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடரமாட்டார்.

    2. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார்.

    3. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல், பண்ட் ஆகியோர் 2024 வரை கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்வார்கள்.

    4. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    5. காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை.

    6. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் வளர்க்கபட்டு வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களால் கவர்ந்துள்ளார்.

    7. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். கே.எல். ராகுலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

    8. ஆனால், அனைத்து மாற்றங்கள் குறித்தும் 2023 உலகக் கோப்பைக்குபின் பேசப்படும்.

    விராட் கோலி

    1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது.

    2. தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மட்டும் தேர்வு செய்வார்கள்.

    3. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அதிக அளவில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுவார்.

    2023-ல் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால், தேர்வுக்குழு அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது. ஒருநாள் போட்டியில் வீரர்கள் அந்தந்த இடங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்களா? என்று சோதிக்கலாம். அதன்பின் 2024-ல் டி20 உலகக் கோப்பை வருவதால் மீண்டும் டி20 முக்கியத்துவம் பெறும்.

    இவ்வாறு அந்த செய்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல் முறையாக ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
    • சிறந்த வீராங்கனை விருதுக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோருடன் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பெண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் நிடா டாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளரை ஐசிசி விரைவில் அறிவிக்க உள்ளது.

    • டி20 போட்டிகள் தொடர்பாக நடிகை சிஹார் ஷின் வாரி வெளியிட்ட பல்வேறு பதிவுகள் பலிக்கவில்லை.
    • விராட் கோலியை விரைவில் அவுட் ஆகும் படி இந்திய வாலிபர் கேட்டுக்கொண்டார்.

    இஸ்லாமாபாத்:

    20 ஓவர்கள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.

    இதில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் நடிகை சிஹார் ஷின்வாரி விபரீத சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

    அதில் என்றும் இல்லாத அதிசயமாக ஜிம்பாப்வே அணி, இந்திய அணியை தோற்கடித்து விட்டால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று கூறியுள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    டி20 போட்டிகள் தொடர்பாக நடிகை சிஹார் ஷின் வாரி வெளியிட்ட பல்வேறு பதிவுகள் பலிக்கவில்லை. இதையடுத்து அவரை பலரும் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் அவரது முந்தைய கணிப்புகள் பொய்யானதை பகிர்ந்து கொண்டனர்.


    இந்நிலையில் இந்திய வாலிபர் ஒருவர் பாகிஸ்தான் நடிகையின் பதிவிற்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார். நானும் ஜிம்பாப்வே காரன் தான். என்று பதிவிட்ட அந்த வாலிபர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி விரைவில் அவுட் ஆகும் படி கேட்டுக்கொண்டார். நீங்கள் சீக்கிரம் அவுட் ஆனால் நான் செட்டில் ஆகி விடுவேன் என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

    • லிட்டோன் தாஸ் இந்தியாவுக்கு எதிராக 21 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் ரன்அவுட் ஆக்கியதாகல் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

    இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 2-ந்தேதி அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் வங்காளதேசம் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது.

    இவ்வாளவு பெரிய ஸ்கோரை வங்காளதேசம் சேஸிங் செய்ய வாய்ப்பில்லை, வெற்றி இந்தியாவுக்கு என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வங்காளதேச அணியின் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார்.

    அர்ஷ்தீப் வீசிய போட்டியின் 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், புவி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஷமி வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தெறிக்கவிட்டார். இதனால் வங்காள தேசம் 6 ஓவரில் 60 ரன்களை எட்டியது. அத்துடன் தாஸ் 21 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், 7 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியதும், லிட்டோன் தான் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு ரன்களுக்கு ஓடும்போது, பவுண்டரி கோடு அருகில் இருந்து கே.எல். ராகுல் வீசிய பந்து ஸ்டம்பை நேரடியாக தாக்கியதால் ரன்அவுட் ஆனார்.

    இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டோன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, பேட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளின் சேர்மன் ஜலால் யூனுஸ் கூறியதாவது:-

    டைனிங் ஹாலில் நாங்கள் உட்கார்ந்து இருக்கும்போது, விராட் கோலி அங்கு வந்தார். அப்போது லிட்டோன் தாஸ்க்கு அவருடைய பேட்டை பரிசாக வழங்கினார். என்னைப் பொறுத்த வரையில், லிட்டோன் தாஸ்க்கு இது ஒரு உத்வேகத்திற்கான தருணம், என்றார்

    • நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.
    • இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வீராட் கோலி தங்களை திசை திருப்பும் முயற்சியாக போலியாக பீல்டிங் செய்ததாக வங்காளதேச வீரர் நூருல்ஹசன் குற்றம் சாட்டி இருந்தார்.

    அக்‌ஷர் படேல் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை லிட்டன்தாஸ் அடிக்க பவுண்டரி லைன் அருகே நின்ற அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து வீச விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதை பிடித்தார். ஆனால் இடையே நின்றிருந்த விராட் கோலி பந்து தன்னை கடக்கையில் அதை பிடித்து பந்து வீச்சாளர் பகுதியை நோக்கி எறிவது போல் பாவனை காட்டினார்.

    ஆனால் கோலியின் அந்த செயலை வங்காளதேச பேட்ஸ் மேன்களான லிட்டன்தாசும், நஜ்குல ஹூசைனும் கவனிக்காமல் 2 ரன்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு தான் நூருல்ஹசன் மைதான நடுவர்களை விமர்சித்துள்ளார்.

    நடுவர்கள் அதை முறையாக கவனித்து இந்திய அணிக்கான தண்டனையாக வங்காள தேசத்துக்கு 5 ரன்கள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும் என்றும் கூறினார்.

    ஐ.சி.சி. விதிப்படி போலியான பீல்டிங் பாவனையால் பேட்ஸ்மேன்கள் திசை திருப்பப்பட்டதாக நடுவர்கள் கண்டறிந்திருந்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்குவர். ஆனால் கோலியின் பாவனை நடுவர்களால் கவனிக்கப்படவில்லை என்றாலும் பேட்ஸ்மேன்கள் அந்த செயலால் திசை திருப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலி 100 சதவீதம் போலியான பீல்டிங்தான் செய்தார் என்றும் அவர் தவறு செய்துவிட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி செய்தது கண்டிப்பாக 100 சதவீத போலி பீல்டிங்தான். பந்தை பிடிக்காமலேயே பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாக தான் 'துரோ' எறிவது போல் ஆக்‌ஷன் செய்தார். நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது. எனவே நாம் தப்பித்தோம். இந்த விஷயத்தில் வங்காள தேச வீரரின் குற்றச்சாட்டு சரியானவைதான்.

    இவ்வாறு சோப்ரா கூறி உள்ளார்.

    • டோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைப்பவர் கவுதம் கம்பீர்.
    • கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது என கம்பீர் கூறினார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

    அதிலும் இவர் டோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு கம்பீர் ஆச்சர்யமாக கோலியை பாராட்டியுள்ளார்.

    அதில் "கோலி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் சிறப்பானது. முதல் 10 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடியும், கடைசி 10 ஓவர்களில் அதிரடியாகவும் விளையாடியும் ஆட்டத்தின் முக்கிய நாயகனாகியுள்ளார்" எனக் கூறியுள்ளார்.

    • டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம்.
    • நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் மூன்று அரை சதங்களை பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்து, இந்தியாவை அசாத்தியமான வெற்றிக்கு வழிநடத்தினார்.

    இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களை சந்தித்தார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த கோலிக்கு ரன்கள் அடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது, ​​ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகியபோது, ​​தனக்கு ஆறுதல் அளித்து மெசேஜ் அனுப்பிய ஒரே நபர் டோனி மட்டுமே என்று கோலி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி டோனி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்துள்ளார்.

    விராட் கோலி, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என டோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.

    மேலும் டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அணுகுபவர் டோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என டோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

    • அக்டோபர் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்தது.
    • சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    துபாய்:

    அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி ஐசிசி பெருமைபடுத்தி வருகிறது.

    அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.

    சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • மெல்போர்னில் இருந்து அரையிறுதியில் பங்கேற்க இந்திய அணி விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.
    • அடிலெய்டில் நவம்பர் 10-ம் தேதி 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி அடிலெய்டில் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை மெல்போர்னில் விளையாடி விட்டு, அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.

    ஐ.சி.சி.யின் விதிப்படி ஒவ்வொரு அணியிலிருந்து 4 வீரர்களுக்கு மட்டுமே நவீன வசதிதளை உடைய வணிக வகுப்பு இருக்கைகள் (பிசினஸ் கிளாஸ் சீட்) வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பிசினஸ் வகுப்பு இருக்கைகள் வழங்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ஓய்வு தேவை என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது பிசினஸ் விகுப்பு இருக்கையை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.

    மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான பயண நேரம் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயண நேரத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களின் கால் மற்றும் முதுகில் வலியை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு போட்டிக்கு முன்பு சரியான ஓய்வு கிடைக்கும்.

    இதுதொடர்பாக இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் பேசுகையில், போட்டிக்கு முன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு வேண்டும். அவர்கள் கால்களை நீட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என கூறினார்.

    டிராவிட், ரோகித் சர்மா மற்றும் கோலியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

    • ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது.
    • விராட் கோலிக்கு அடைந்த காயம் தொடர்பான முழு தகவலை பிசிசிஐ தெரிவிக்கவில்லை.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று நடந்தது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    நாளை 2-வது அரையிறுதி ஆட்டம் அடிலெய்டில் நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் கோலி 907 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அடிலெய்டில் கோலி 3 சதம், 4 அரைசதம் அடித்திருக்கிறார். 4 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோலி, 2 சதம் அடித்திருக்கிறார்.

    டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, 2 போட்டிகளில் விளையாடி 154 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 2 அரைசதம் அடங்கும். இதனால், அரையிறுதியில் விராட் கோலி பெரிதாக சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி பயிற்சி செய்து வந்தார். அப்போது ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த விராட் கோலி மைதானத்தில் சுருண்டு விழுந்து சிறிது நேரம் மைதானத்திலேயே அப்படியே அமர்ந்து இருந்தார்.

    ஆனால் விராட் கோலி மைதானத்தை விட்டு செல்லாமல் மீண்டும் தனது பயிற்சியை தொடங்கினார். எனினும் விராட் கோலிக்கு அடைந்த காயம் தொடர்பான முழு தகவலை பிசிசிஐ தெரிவிக்கவில்லை.

    • விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதம் அடித்துள்ளார்.
    • அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

    அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும் விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அதனை தொடர்ந்து குப்தில், பாபர் ஆசம் உள்ளனர். 

    • இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
    • இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.

    முதலில் பேட் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 13-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

    டி 20 உலக கோப்பையை வெல்லும் அணியில் முதன்மையான அணியாக கருதப்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், எங்கள் கனவை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது.

    ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என பதிவிட்டுள்ளார்.

    ×