என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virendra Kumar"

    • இந்தியா முழுவதும் வயது அதிகமானவர்களின் கால்களின் இளையவர்கள் விழுந்து வணங்குவது வழக்கம்.
    • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக வீரேந்திர குமார் உள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலம் திக்மார்க் மக்களவை தொகுதியில் வென்று மத்திய அமைச்சரானவர் வீரேந்திர குமார்.

    1996 ஆம் ஆண்டிலிருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வரும் வீரேந்திர குமார் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியை சந்தித்ததில்லை. 1996 ஆம் ஆண்டு சாகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. ஆன வீரேந்திர குமார் 2009, 2014, 2019, 2024 ஆகிய 4 மக்களவை தேர்தலிலும் திக்மார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், திக்மார்க் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் தன்னை பார்க்க வருபவர்கள் யாரும் தனது காலில் யாரும் விழ கூடாது என்று வீரேந்திர குமார் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

    மேலும், "யாரவது எனது காலை தொட்டு வணங்கினால் அவர்களுக்கு எந்த வேலையும் யாரும் செய்து தரக்கூடாது" என்று வீரேந்திர குமார் கறாராக உத்தரவிட்டுள்ளார்.

    பாஜக அரசின் அமைச்சரவையின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருக்கும் வீரேந்திர குமார், சமூக நீதியின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    இந்தியா முழுவதும் வயது அதிகமானவர்களின் கால்களின் இளையவர்கள் விழுந்து வணங்குவது வழக்கம். அதே சமயம் ஒருவரின் காலில் இன்னொருவர் விழக்கூடாது, அது சுயமரியாதைக்கு இழுக்கு என்று தமிழ்நாட்டில் சில தரப்பினர் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்,11,308 வீடுகள் கட்ட அனுமதி.
    • கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    கோவளம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே முட்டுக்காட்டில் செயல்படுத்தப்படும் சமூக நீதி திட்டங்களின் செயலாக்கம் குறித்து மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அவர் பேசியதாவது:

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 208 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16, 265 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 11,308 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ நவீன வசதிகள் இந்தப் பூங்காவில் இடம் பெற்றிருக்கும்.
    • மாற்று திறனாளி பூங்கா அமைக்க மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உதவி.

    நாக்பூர்:

    மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வீரேந்திர குமார் ஆகியோர் பல்வேறு உதவி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, சமூகத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சேவை செய்வதும், கடைக் கோடியில் இருப்பவர்களும் அரசின் திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்வதும் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார், மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளி பூங்காவை நாக்பூரில் உருவாக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சகம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    இந்த பூங்காவில் உணர்திறன் தோட்டம், நறுமணத் தோட்டம், திறன் பயிற்சி வசதி, விளையாட்டு மற்றும் தகவல் சார்ந்த வசதி உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×