என் மலர்
நீங்கள் தேடியது "Virudhunagar Blast"
- பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் கன்னசேரிபுதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பட்டாசு ஆலை வெடி விபத்தில் ராமலட்சுமி பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.
- விருதுநகர் அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் இறந்தனர்.
- வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.