என் மலர்
நீங்கள் தேடியது "vote count"
- கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது.
- 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 113 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
- மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
- தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கை பாஜகவின் மீது உள்ளது.
இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பாஜக மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
இத்தருணத்தில், உழைக்கும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் அனைவரும் ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாம் நிறுத்தவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று நாம் இணைந்து இந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம்.
தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே, பாஜக மீது உங்கள் ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும்.
தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக நிர்வாகியின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
- தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் பின்னடைவில் இருந்து வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் 63 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க உள்ளது.
இந்நிலையில், 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தப் போர் தொடரும்.
தெலுங்கானா மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் - தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
உழைப்பிற்கும் ஆதரவிற்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
- தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றிப் பெற்ற கட்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிறைந்த ஒரு ஆட்சி காலத்தை வழங்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
- தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.
தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை மக்கள் அகற்ற சில காரணங்கள் கூறப்படுகின்றன.
அந்த வகையில், "மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை அதிகம் கவனம் செலுத்தியது. அதிக அளவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள். வாரிசுகளின் அதீத ஆதிக்கம். காங்கிரஸ் கட்சி மற்றும் ரேவந்த் ரெட்டியை குறைத்து மதிப்பிட்டது. முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது. அதீத அதிகாரம். இரண்டு முறை தொடர் ஆட்சியில் இருப்பதால் இயல்பான மக்களின் மனநிலை" உள்ளிட்டவைகளை காரணங்களாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
- சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.
காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.
- ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்.
- நியமனம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியீடு.
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் 4 அடுக்கு பாதுகாப்புடன் 39 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு எண்ணும் பணிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 39 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணும் பணிக்கு இப்போது கூடுதலாக 5 பேர் முதல் 20 பேர்கள் வரை உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, தென் சென்னைக்கு துணை கலெக்டர்கள், தாசில்தார், ஸ்பெஷல் தாசில்தார் என மொத்தம் 10 பேர்கள் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சென்னை தொகுதி வாக்கு எண்ணும் பணிகளுக்கு ஸ்பெஷல் தாசில்தார்கள் 9 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். வடசென்னை தொகுதிக்கு தாசில்தார், ஸ்பெஷல் தாசில்தார் என 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் தொகுதிக்கு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ரீஜனல் மானேஜர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர், டாஸ்மாக் மானேஜர், ஸ்பெஷல் தாசில்தார் உள்பட 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு ஸ்பெஷல் தாசில்தார் 9 பேரும் காஞ்சீபுரம் தொகுதிக்கு துணை கலெக்டர் உள்பட 9 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதிக்கு மீன்வளத் துறை உதவி இயக்குனர் உள்பட 22 அதிகாரிகள் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து வாக்கு எண்ணிக்கை பணிகளை முன்னின்று கவனிப்பது முதன்மையான பணி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம்.
பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதற்கட்டமாக தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளளது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல், ஜூன் 1ம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.
இதைதொடர்ந்து, ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு நேற்று (ஜூன் 1) கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையே ஆந்திரா, ஒரிஷா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது,
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது.
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019 தேர்தலில் 82.17 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கந்து, துணை முதலமைச்சர் சவ்னா மெய்ன் ஆகியோர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பபெற்று பாஜக ஆட்சியமைத்திருந்தது . மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக பிரேம் சிங் தமன் ஆட்சியில் உள்ளார். சிக்கிமில் இந்த தேர்தலில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது.
வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அருணாச்சலில் உள்ள 60 இல் 50 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 42 சீட்கள் முன்னிலையில் உள்ளது. மாநில கட்சிகளான ஜே.டி (யு) 7 இடங்களிலும், என்.என்.பி 5 இடங்களிலும், பி.பி.ஏ ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது உள்ளது. காங்கிரஸ் இதுவரை 5 இடங்களில் வென்றுள்ளது.
சுயேச்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெரும் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
- 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
- சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.
காங்டாக்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் செல்வாக்குமிக்க மாநில கட்சியான சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.
முதல்-மந்திரியாக பிரேம்சிங் தமாங் ஆட்சி நடத்தி வந்தார். அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவதால் பாராளுமன்ற தேர்தலுடன் சிக்கிம் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவுகிறது.
சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இவர்களில் யார்-யார் வெற்றி பெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேசிய கடசிகளானபாரதீய ஜனதாவுக்கும், காங்கிர சுக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாததால் அந்த குட்டி மாநிலத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ள வில்லை.
இந்தநிலையில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சி முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 30 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங் முதல் சுற்று முடிவில் 6,443 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதே சமயத்தில் முன்னாள் முதல்-மந்திரி பவன்குமார் முதல் சுற்றில் பின்தங்கி இருந்தார்.
அதுபோல பிரபல முன்னாள் கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியாவும் தனது பார்புங் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இதனால் சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.
ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா மீண்டும் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சி 90 சதவீத வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்கிறார்.
- காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
- நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்த முடிந்த நிலையில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் நாள் இன்று என்பதால் நாடே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கும், காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நடைபெற்றது. எதிரிக்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு வலுவான போட்டியை வழங்கும் வகையில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது. அதன்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருந்தது.
இந்நிலையில் இந்த மொத்த தேர்தல் திருவிழாவிலும் முக்கிய நாளான இன்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உலக நாடுகள் என அனைவரின் கண்களும் தேர்தல் முடிவுகளை நோக்கியே குவிந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றியைக் கொண்டாட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நேற்றே தொடங்கியது. இந்த நிலையில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி பூரி, பூந்தி உள்ளிட்ட வகைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் பாஜக ஊடகங்களால் போலியாக திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்று இந்தியா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிரான முடிவுகளே வெளியாகும் என்று அடித்துக் கூறுகிறது இந்தியா கூட்டணி. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.