என் மலர்
நீங்கள் தேடியது "Waqf Board Act"
- வாடகை கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.
- 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
மத்திய அரசு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய வக்பு திருத்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடை யடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் இன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டி ருந்தது.
இதன் காரணமாக சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜார் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை தவிர சுமார் 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
அவர்களுக்கு ஆதரவாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் பள்ளி-கல்லூரி, ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப் படைந்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீரில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
- அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வக்பு திருத்த சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானம் சபாநாயரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அவை ஒத்திவைக்கப்படடது.
இதற்கிடையில் பாஜக-வின் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டத்தில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி அரசு அடிபணிந்து விட்டது என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முஸ்லிம் முதல்வர் (உமர் அப்துல்லா) வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கனும். அல்லது குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனச் சொல்லியிருக்க வேண்டும்.
வக்பு மசோதா மீதான தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து தேசிய மாநாடு கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வலுவான மெஜாரிட்டி பெற்ற போதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக-வின் திட்டத்திற்கு முற்றிலுமாக அடிபணிந்ததாக தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் மட்டும்தான் முஸ்லிம் அதிகமாக வாழும் மாநிலம். மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாகக் கூறப்படும் ஒரு அரசாங்கத்திற்கு இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்கக் கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது.
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் முஸ்லிம் முதல்வர், நாட்டில் அதிக அளவில் வாழும் முஸ்லிம் மாநிலம் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அல்லது ஜம்மு-காஷ்மீரில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்லும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுபோன்று ஏதும் நடக்கவில்லை. நான் இன்று அவமானமாக உணர்கிறேன்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்தார்.
- வக்பு வாரிய சட்ட திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமாகியுள்ளது.
பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிதுள்ளார். இதனால் வக்பு திருத்த மசோதா சட்டமாகியுள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில், வாக்கு வங்கி நலனுக்காக வழக்குகள் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-
வாக்கு வங்கியை தூண்டிவிட்டு, நாட்டில் கலவரம் போன்ற சூழ்நிலைய உருவாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்குதான் இந்த வழக்குள். வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்து ஆதாயம் அடைந்து வரும் நில மாஃபியாக்கள் மட்டுமே புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள். குறைந்த அளவிலான பொதுநல மனுக்கள் அதிக வாக்கு வங்கி நலனுக்காக வழக்குகள் போல் தெரிகிறது.
புதிய சட்டம் சமூக நீதியையும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசியலமைப்பின் பயன்பாட்டையும் உறுதி செய்யும். இது இந்து-முஸ்லிம் பிரச்சனை அல்ல. ஏராளமான முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைக்கள் கூட இந்த சட்ட திருத்தத்தை வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்தார்.
- எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
- சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-
சமூகத்தில் சீர்திருத்தம் வரவேண்டும் என்று பேசிக் கொண்டே சீர்திருத்தத்தை தடுப்பதுதான் சிலரது வேலை. அதற்கு மதத்தையும், சாதியையும் கேடயமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இஸ்லாமியர்களிடம் 'முத்தலாக்' முறையை மதத்தின் பெயரால் வைத்து கொண்டு பெண்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எந்த சமூகத்திலும் பெண்கள் முன்னேறினால் தான் உண்மையான முன்னேற்றம் வரும்.
முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் அந்த அடிமை நிலையில் இருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டனர். சொத்து மீதான உரிமை கிடைத்துள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்தத்தையும் இமாம்களுடன் கலந்து ஆலோசித்துதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இத்தனை வருடங்களாக சுற்றி சுற்றி எந்த மாற்றத்தையும் காணாத நிலையில் இப்போதுதான் நம்பிக்கை வந்துள்ளது.
இதை எதிர்ப்பவர்கள் பிரதமர் மோடி எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை கொண்டவர்கள். மதத்தை தாண்டி சீர்திருத்தத்தை பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.
எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வாக்களிப்பது மதத்தையும், சாதியையும் காப்பதற்கு அல்ல. வேலை வாய்ப்பு வேண்டும். சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வேண்டும், சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
மதங்களை சொல்லி காட்டி மக்களின் உணர்வுகளை மறைக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடிக்கும் தி.மு.க. தனது மந்திரி சபையில் எத்தனை இஸ்லாமியர்களுக்கு மந்திரி பதவி கொடுத்துள்ளது? அவர்களுடைய சிறுபான்மை நாடகத்தை கேட்டும், பார்த்தும் மக்கள் சலித்து போனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.