என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman arrest"

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருந்தி வாழ்வதாக கூறிய பெண் கஞ்சா விற்றபோது போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் கஞ்சா விற்றதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாகவும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளி பிரியாவிடம் சாந்தி 1 வருடம் திருந்தி வாழ்வதாக பிராமண பத்திரம் கொடுத்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களே ஆன நிலையில் சாந்தி மீண்டும் கஞ்சா விற்றார். இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.

    1 வருடத்தில் சாந்தி திருந்தி வாழ்ந்த நாட்கள் போக மீதமுள்ள 239 நாட்கள் அவரை சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மாந்திரீகம் பலிக்காததால் மந்திரவாதியை கொன்றதாக கைதான பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கைதான அப்பெண் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லி கொண்டிருந்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆசிட்டை அவர் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முகம் கருகிய சைய்யது பஸ்ருதீன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அப்பெண் அடிக்கடி குறி கேட்க வரும் ஐஸ்அவுசை சேர்ந்த நபீன் தாஜ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடினர். அப்போது அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார்.

    இதையடுத்து அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சான்றிதழை அடிப்படையாக வைத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    நபீன் தாஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனது கணவர் மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனைக்காகவும், தொழில் விருத்திக்காகவும் மந்திரவாதி சைய்யது பஸ்ரூதினை அடிக்கடி சந்தித்து வந்தேன். அப்போது பூஜை பொருட்கள் வாங்கி செல்வேன். ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கினார். தொடர்ந்து 13 வாரம் வருமாறு அவர் கூறினார்.

    ஆனாலும் பிரச்சனை தீராததால் அவருடன் சண்டை போட்டேன். அதன் பின் மீண்டும் 13 வாரம் வருமாறு கூறினார். இது போல் கடந்த 2 ஆண்டுகளாக அவரை சந்தித்து வந்தேன். ஆனால் எனது பிரச்சனை எதுவுமே தீரவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்தேன்.

    இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் மந்திரவாதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி உறவினர் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனக்கு மன உளைச்சல் இருப்பதாக கூறியதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நபீன் தாஜ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    அம்பத்தூரில் போலீஸ் அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பி.ஜி.என். சாந்தி நகர் தேவதாஸ் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. மத்திய பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நேற்று வரலட்சுமி விரதத்திற்காக கிருஷ்ணசாமியின் மனைவி பீரோவில் இருந்த நகைகளை எடுத்து பூஜை அறைக்கு கொண்டு சென்றார். அப்போது 30 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கிருஷ்ணசாமி வீட்டில் வேலை செய்து வந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லலிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விவேகானந்தனை பிடித்தனர். அவரிடமிருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டது. வேலைக்கார பெண் லலிதாவை போலீசார் கைது செய்தனர்.

    கொல்கத்தாவில் சேல்ஸ்மேன்களுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர். #BengalHousewife
    கொல்கத்தா:

    கொல்கத்தாவின் நியூ அலிப்பூரைச் சேர்ந்த மதுமந்தி சகா என்ற பெண், கடந்த மாதம் 27-ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் சமையலறை புகைபோக்கி மற்றும் சில சாதனங்கள் வாங்கி உள்ளார். இதற்காக ரூ.40 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பிவிட்டது.

    இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மதுமந்தியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அப்போது தன் வீட்டிற்கு வந்து பணம் வாங்கிக்கொள்ளும்படி மதுமந்தி கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அவரது வீட்டிற்கு 2 சேல்ஸ்மேன்கள் நேற்று பணம் வாங்க சென்றுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானத்தை ஒரு சேல்ஸ்மேன் குடித்ததும் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனால் மற்றொரு சேல்ஸ்மேன் அங்கிருந்து தப்பி ஓடி, நியூ அலிப்பூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மதுமந்தியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சேல்ஸ்மேனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குளிர்பானத்தில் விஷத்தை கலந்து தன்னை கொல்ல முயன்றதாக அந்த சேல்ஸ்மேன் குற்றம்சாட்டியுள்ளார்.  #BengalHousewife
    அரூர் அருகே கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

    இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஒரு பெண் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நேரில் சென்று ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கல்யாணி (வயது 62) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் அரசு பஸ் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை பிரபு (43) என்பவர் ஓட்டி வந்தார்.

    பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை நிறுத்த முயன்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலு என்பவரது மனைவி ரெஜினா என்பவரை ஓரமாக போய் நிற்கும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த ரெஜினா, டிரைவர் பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி பிரபு பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா வழக்குப்பதிவு செய்து ரெஜினாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் ரெஜினா அடைக்கப்பட்டார்.

    குளிர்சாதன பெட்டி வாங்கி ரூ.37 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

    போரூர்:

    நெசப்பாக்கம் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவர் நூகன் ஏர்கான்ஸ் என்கிற பெயரில் குளிர் சாதனப் பெட்டி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் கிண்டி எம்.கே.என் சாலையில் ஸ்கை லக்சரி இண்டியா சர்வீசஸ் என்கிற பெயரில் அலுவலகம் நடத்தி வந்த சக்தி முருகன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டி வாங்கி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் மொத்தம் 107 குளிர்சாதனப் பெட்டிகளை பிரசாந்த் குமார் நிறுவனத்தில் இருந்து சக்தி முருகன் வாங்கினார்.

    இதன் மதிப்பு சுமார் ரூ.37லட்சம். பிரசாந்த் குமாருக்கு தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்த நிலையில் திடீரென தலைமறைவானார். இது குறித்து பிரசாந்த் குமார் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார்.

    அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெய ராஜ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதையடுத்து சக்தி முருகனின் மனைவி பூர்ணிமா மற்றும் சக்தி முருகனின் சகோதரர் ஹரிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #arrestcase

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷிய உளவாளியாக நடித்த பெண்ணை வாஷிங்டன் போலீசார் கைது செய்தனர்.
    வாஷிங்டன்:

    ரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார்.

    இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மெல்லமெல்ல பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷிய அரசின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார்.

    பல்வேறு பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்த மரியா, அமெரிக்க அரசின் நிதித்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் வெளிநாட்டு  சொத்துகள் கட்டுப்பாட்டு துறையால் தடைவிதிக்கப்பட்ட அலெக்ஸான்டர் டோர்ஷின் என்பவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.


    ரஷியா மத்திய வங்கியின் துணைத் தலைவரான அலெக்ஸான்டர் டோர்ஷின் ஆலோசனைப்படியும், அவரது திட்டப்படி அதிகாரத்தில் உள்ள சிலரை வளைத்துப்போட்டு அமெரிக்க அரசின் தேசிய முடிவுகளில் தலையீடு செய்யவும், குறிப்பாக, அமெரிக்க அரசின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை தளர்த்தவும் மரியா புட்டினா முயன்று வந்துள்ளார்.

    இவரது நடவடிக்கைகளை மோப்பம் பிடித்த அமெரிக்க உளவுப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தனர். நாளை (புதன்கிழமை) அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    அலெக்ஸான்டர் டோர்ஷின் மட்டுமின்றி மரியாவுடன் அமெரிக்காவை சேர்ந்த இருவருடனும், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிரான அமைப்பினருடனும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Russianwomanarrested #actingasRussianagent
    சென்னை நெசப்பாக்கத்தில் கொடூரமாக மகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார். கணவர் தன்னை விலக்கி வைத்து இருந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுதாகர் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறினார்.

    துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கவும் சம்மதித்தார். இதை தொடர்ந்து இருவரும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அனந்தராமன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    பொள்ளாச்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறை சித்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். பெயிண்டர். இவரது மனைவி லோகநாயகி. இவர் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் பணம் வசூலித்தார்.

    அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரம்மாள் என்பவரிடம் முதலில் ரூ.5 ஆயிரம் பணம் வசூலித்துள்ளார். ஒரு வாரம் கழித்து ரூ.10 ஆயிரமாக கொடுத்துள்ளார். இதனால் இரட்டிப்பு பணம் கிடைத்ததால் சுந்தரம்மாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் லோகநாயகியிடம் பணம் கொடுத்துள்ளனர்.

    அவர் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். பின்னர் பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக சுந்தரம்மாள் கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    விசாரணையில் லோகநாயகி பணம் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    காசிமேட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு பகுதியில் காசிபுரம் ஏ பிளாக்கை சேர்ந்தவர் நண்டுகுமார். இவரது மனைவி தனலட்சுமி (48). வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று இரவு காசிமேடு போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர் . அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலமாக்கி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தனலட்சுமி கைது செய்யப்பட்டார். மது பாட்டில்கள் விற்றதாக ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews

    திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.

    ×