என் மலர்
நீங்கள் தேடியது "woman attacked"
- இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார்.
- 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை உருமாண்டம்பாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரம்யா வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு எரிவாயு சிலிண்டர் போடுவதற்காக ஆட்டோ ஒன்று வந்தது.
அப்போது அந்த சாலையில் ஆட்டோ வர முடியாதபடி இருசக்கர வாகனம் ஒன்று நின்றிருந்தது. குறுகலான சாலை என்பதால் 2 வாகனங்கள் வரமுடியாது. இதை பார்த்த அந்த பெண், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம், வாகனத்தை எடுத்து அருகே உள்ள வீட்டின் முன்பு சாக்கடை மேல் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் சிலாப்பில் நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
இவர் கூறியதை அந்த வீட்டின் உரிமையாளரான செங்காளியப்பன் (வயது60), அவரது மகன் ராஜேஷ்(37), ஆகியோர் யாரை கேட்டு எங்களது வீட்டின் வாசலில் உள்ள சிலாப் மேல் வண்டியை நிறுத்த கூறினாய்? என ரம்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளாலும் வசைபாடினர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜேஷ் இரும்பு கம்பியை எடுத்து வந்து ரம்யாவை தாக்க முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து, ரம்யாவை காப்பாற்றி அங்கிருந்து அனுப்பினர்.
அவர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு செங்காளியப்பனின் உறவினரான காப்பீடு ஏஜென்சி முகவரான சுந்தர்ராஜன்(50) வந்தார்.
அவர் இங்கு என்ன நடந்து என தெரியாமேலேயே வந்த வேகத்தில் ரம்யாவை தனது காலால் எட்டி உதைத்தார். மேலும் ரம்யாவின் கையை பிடித்து முறுக்கி, அவரை கீழே தள்ளி தாக்கினார்.
இதை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர், எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் ஓடி சென்று தடுத்தார். ஆனாலும் அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். பெண்ணை தாக்கும் வீடியோவை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ரம்யா கூறியதாவது:-
செங்காளியப்பன் எப்போதும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் என்று கூட பாராமல் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும் செங்காளியப்பனின் மகன் ராஜேஷ் என்னை அடிக்க இரும்பு ராடை எடுத்து வந்ததாகவும், சுந்தரராஜன் அடித்தபோது, அருகில் இருந்தவர்கள் என்னை காப்பாற்றினர். இல்லையென்றால் அவர்கள் என்னை கொன்று இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன், செங்காளியப்பன், அவரது மகன் ராஜேஷ் ஆகிய 3 பேர் மீதும் பொது இடத்தில் பெண்ணை மானபங்க படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன் வெள்ளகிணர் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார்.
- அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.
- வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் ெஜ.ஜெ. நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 65). இவருக்கும் இவரது வீட்டின் எதிரில் வசிக்கும் பிரேம்தாஸ் என்பவர் வீட்டிற்கு வந்து செல்லும் வயல்வெளியை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.
சம்பவத்தன்று தமிழ்செ ல்வியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அஸ்வின் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் அவரை கீழே தள்ளி அவரது தங்க கம்மலை பறித்து சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ரெட்டியா ர்பாளையம் போலீசார் அஸ்வினை தேடி வருகின்றனர்.