என் மலர்
நீங்கள் தேடியது "Women Safety"
- தவெக பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
- சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.
சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.
சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?
இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
- சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.
வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில் களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லாபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உங்கள் லாபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வாடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.
சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா.கீழ் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உணவு பொருள் சிறுதொழில்:
1.மசாலா பொடி தயாரிப்பு
2.ஊறுகாய் தயாரிப்பு
3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு
4.ஜாம் தயாரிப்பு
5.சிப்ஸ் தயாரிப்பு
6.அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு
7.மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு
8.சிறு உணவகம்
9.டீ கடை
10.ஜூஸ் கடை
11.சிற்றுண்டி விற்பனை கடை
12.இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு
சிறு விற்பனை தொழில்கள்:
13.ஆடைகள் விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யலாம்).
14.சிறு பாத்திரங்கள் விற்பனை,
15.அழகு சாதன பொருள்கள் விற்பனை
16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை
17.வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை
18.பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை
19.பழம் விற்பனை
20.காய்கறி விற்பனை
ஆபீஸ்களுக்கு எழுதுபொருள் விற்பனை
பண்ணை சிறு தொழில்கள்:
21.முயல் வளர்ப்பு
22.கோழி மற்றும் காடை வளர்ப்பு
23. தேனீ வளர்ப்பு
24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால் நல்லது )
மேற்கண்ட பண்ணை தொழில்கள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது. இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழிகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்குமிடங்களை தெரிந்து கொள்வது .
மூன்றாவது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைத்தல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும்.
நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் 5 முக்கிய வேலைகளை ஒவ்வொன் றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலை களை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம்.
ஐந்தாவது மனக்காட்சி படுத்துதல் உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் உங்களின் படைப்பு திறனை முடிவாகிவிடுதல். 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடிந்தால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும். உங்கள் நிறுவன கணக்கில் ஏராளமான பணம், கார் பங்களா, வெளிநாடு சுற்றுலா மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்த வேண்டும்.
- இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன.
- சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து செய்வதோடு வேலைகளை எளிதாக முடிக்க விருப்பப்படுகிறார்கள். இவர்களுக்காகவே இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன என்றால் சற்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா. என்னதான் சமையல் வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்தாலும் மாவு அரைப்பது, சப்பாத்தி போடுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்குவார்கள். அதுபோன்ற வேலைகளையும் எளிதாக செய்வதற்கென்றே புதுமையான உபகரணங்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன…
* இப்பொழுது வந்திருக்கும் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் இடத்தையும், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா. ஆமாம்., இந்த புதுமையான கிரைண்டர்கள் இடத்தை அடைக்காதவாறு மிகச் சிறிய இடத்திலும் வைத்துக் கொள்வது போல் மோட்டருக்கு மேலேயே மாவரைக்கும் பாத்திரமானது இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.. இதில் அரிசி மற்றும் உளுந்தைப் போட்டுவிட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடியை போட்டு மூடி கிரைண்டரை இயக்க வேண்டும்.. இடையில் தண்ணீர் தேவைப்பட்டால் மூடியின் மேற்புறத்தில் இருக்கும் சிறிய துளை வழியே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதேபோல் மாவு அரைத்து முடித்தபிறகு நாம் கைகளால் மாவை அள்ள வேண்டிய அவசியமே இல்லை..
இந்த கிரைண்டரில் மாவரைக்கும் பாத்திரம் சுற்றாமல் அதன் உள்ளிருக்கும் கற்கள் மட்டும் சுற்றுவதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள்..இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அரைக்கும் மாவானது சூடாவது தவிர்க்கப்படுகின்றது..இதனால் இட்லி கூடுதல் மிருதுவாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது..மாவரைக்கும் பாத்திரத்திலேயே கீழ்ப்புறத்தில் மாவு வெளியேறுவதற்காக ஒரு துளையானது கொடுக்கப்பட்டுள்ளது.. மாவு அரைத்து முடித்தபிறகு அந்த துளையின் மூடியை அகற்றி பாத்திரத்தில் இருக்கும் மாவை கைகளில் தொடாமலேயே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிவிட முடியும்.. அதேபோல் அந்த மாவு பாத்திரத்தை கழுவுவதற்கும் மேற்புறத்தில் தண்ணீரை ஊற்றி கிரைண்டரை இயக்கினால் அது நன்றாக சுத்தமாகி அந்த தண்ணீரும் துளை வழியாக வெளியேறிவிடும். சாதாரண கிரைண்டர்கள் இயங்கும் அந்த நேரத்திலேயே மிகவும் அருமையாக மாவை அரைத்துத் தரும் இந்த புதுமையான கிரைண்டரை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.ஆண்கள்,உடல்நிலை முடியாதவர்கள் மட்டுமல்லாது வயதானவர்களும் இந்த கிரைண்டரை எளிதாக உபயோகிக்கலாம்..
*சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.இந்த குக்கர் மூடியில் மேற்புறத்தில் தண்ணீர் குழாய் போன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூடியின் உட்புறம் நீளமான ஸ்ட்ரா போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக சாதத்தில் இருக்கும் கஞ்சி மூடியின் வெளிப்புறம் கொடுக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக வெளியேறிவிடும். இந்தக் குழாயின் மேற்புறத்தில் ஒரு சிறிய திருகு மூடி ஒன்று இருக்கின்றது. இந்த திருமுடியை திறப்பதன் மூலம் சாதத்தில் இருக்கும் கஞ்சி வெளியேற்றப்படுகிறது.. நம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் இந்த குக்கர்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள்..
*வீட்டிலேயே நம் வசதிக்கேற்ப எண்ணையை அரைத்துக் கொடுக்கும் இயந்திரங்களும் மிகவும் கச்சிதமான அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அரைக்கிலோ வேர்க்கடலையைக் கூட இந்த இயந்திரத்தில் போட்டு சுத்தமான எண்ணெயை எடுக்க முடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.. இந்த எண்ணெய் இயந்திரத்தின் மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அரைக்க வேண்டிய எள், வேர்க்கடலை,தேங்காய்,பாதாம், சூரியகாந்தி விதை என எவற்றை வேண்டுமானாலும் ஒருமுறை அரைப்பதற்கு அரை கிலோ என்ற அளவில் போடமுடியும்.இயந்திரத்தின் உள்ளே செல்லும் இவை எண்ணை தனியாகவும் சக்கை தனியாகவும் பிரித்து வெளியேற்றப்படுகின்றது.நம் கண்ணெதிரிலேயே மிகவும் சுத்தமாகவும் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதுமான இந்த எண்ணை அரைக்கும் இயந்திரம் ஒவ்வொருவரது சமையலறையிலும் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத உபகரணம் என்று சொல்லலாம்.வாரத்திற்கு ஒரு முறை நம் வீட்டிற்குத் தேவையான எண்ணெயை நாமே அரைத்துக் கொள்ளலாம். அழகான வடிவமைப்புடன் இருக்கும் இந்த இயந்திரம் இடத்தை அடைக்காமல் இருப்பதுபோல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
*சாதாரண டேபிள் டாப் கிரைண்டரின் வடிவத்தில் சப்பாத்தி தேய்த்துக் கொடுக்கும் இயந்திரம் விற்பனையில் உள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இந்த இயந்திரத்தில் சப்பாத்தி தேய்க்கும் கல் மற்றும் பூரிக்கட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. சப்பாத்தி தேய்க்கும் கல்லின் மீது வட்ட வடிவில் உறுதியான, மெலிதான பிளாஸ்டிக் தாள்கள் இருக்கின்றன.சப்பாத்தி உருண்டையை உருட்டி இரண்டு பிளாஸ்டிக் தாள்களின் இடையில் வைத்து அதன்மீது பூரி கட்டையை பிரஸ் செய்து இந்த இயந்திரத்தை இயக்கினால் பூரி கட்டையில் இருக்கும் இரண்டு உருளைகளும் எதிரெதிர் திசையில் இயங்கி சப்பாத்தியை மிகவும் மெல்லியதாக திரட்டித் தருகின்றன..ஐந்து நபர்கள் வரை இருக்கும் குடும்பத்திற்கு இந்த சப்பாத்தி திரட்டும் இயந்திரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.இப்பொழுது சொல்லுங்கள் இந்த இயந்திரம் வீட்டில் இருந்தால் ஆண்களும் எளிதாக பூரி மற்றும் சப்பாத்தி செய்ய முடியும் தானே?
*சமையலறையில் சமைக்கும் பொழுது ஃபேனை இயக்கினால் கேஸ் அடுப்பு அணைந்து விடும்.. எனவே பெரும்பாலான நேரங்களில் வேர்த்து விறுவிறுத்து தான் எந்த ஒரு வேலையையும் செய்ய முடிகின்றது. இதனால் சீக்கிரமாகவே சோர்வு ஏற்பட்டு விடுகின்றது..இதுபோன்ற சோர்வு ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் சமையலறையில் இருப்பதற்காகவே பிரத்தியேகமாக ஃபேன் களை வடிவமைத்திருக்கிறார்கள்.. இந்தப் ஃபேன்களை அடுப்பின் அருகிலேயே வைத்து இயக்கினாலும் அவை அடுப்பை அணைக்காமல் அதே நேரத்தில் நமக்கும் குளுமையான காற்றை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உயரத்தை நமக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கிக் கொள்ள முடியும்.சீலிங் ஃபேனிற்கு மாற்றாக வந்திருக்கும் இந்த ஃபேன்களை சமையலறையில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்
* ஏசி பொருத்த முடியாத இடங்களிலும் வைத்துக் கொள்வது போல் போர்ட்டபிள் ஏசியை வடிவமைத்து விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சிறிய வகை ஏசியை சமையலறை, படுக்கை அறை, அலுவலக அறை என எங்கு வேண்டுமானாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நம்முடனேயே எடுத்துச் செல்ல முடியும்.சிறிய ஏர் கூலர் வடிவில் இருக்கும் இந்த போர்ட்டபிள் ஏசி அதிகப்பட்ச குளிர்ச்சியை கொடுக்கின்றது.. இந்த ஏசியின் அடிப்புறத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும்.
- முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான்.
கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக்குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அநேகமான கிட்டதட்ட அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.
உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.
பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அங்கு சில அயோக்கியர்களால் அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.
முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் செல்போனில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை அறியலாம்.
"ஹிட்டன் கேமரா டிடெக்டர்" (hidden camera detector) என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம்.
- பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம்.
- ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.
ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
3-வது தவணையாக...
விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.
தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.
தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.
சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.
முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
- வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு போதைப் பொருட்கள், செல் போன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
நெல்லை:
வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் முருகவேல் வரவேற்று பேசினார். இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள், செல் போன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கி பேசினார்.
- ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது.
- உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது.
பொருட்களை ஒவ்வொன்றாக வாங்க அலைந்து திரிந்த காலம் போய், இன்று செல்போனில் விரல் நுனியை உரசினால் பாடம் செய்த கறிவேப்பிலை, புற்று மண் முதல் படம் பார்க்கும் டி.வி., கணினி வரை அனைத்து பொருட்களும் வீடு தேடி வந்து சேருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்
ஆம். ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது. கடை கடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிய நாம் இன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யலாம். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருள் உங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆர்டர் செய்த பொருள் தாமதமாக கிடைத்தாலும் பெரிதுபடுத்துவதில்லை. ஆன்லைன் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகை, ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பொருள் இலவசம், இலவச டெலிவரி என்று பொருட்களை வாங்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. எதற்கு அலைந்து திரிந்து கடைக்கு சென்று வாங்க வேண்டும்.போக்குவரத்து செலவு மிச்சம். அதிகபட்ச சலுகையில் விலை சற்று குறைவாக வேண்டிய பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். அலட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள் .
மருந்து முதல் விருந்து வைக்கும் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனில் கிடைத்தாலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறு பொருள் வருவது, பழுதான, உடைந்த செயல்படாத பொருட்கள் வருவது என்பது அடிக்கடி நிகழ்கிறது. இந்த பஞ்சாயத்துகள் கூட பல நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு சென்று விடுகின்றன. அதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கிறது.
பிரபலமாகி மக்களை ஆட்கொண்டு வரும் ஆன்லைன் பற்றி பலருக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வாருங்கள் அதைப்பற்றி இங்கே காண்போம்.
ஆன்லைனில் 'புதிதாக சந்தையில் என்ன வந்திருக்கிறது'என்று தேடும்போது அது தற்போது உங்களுக்கு கட்டாயம் தேவையா? என்று யோசித்து விட்டு 'ஆம்' என்றால் மட்டுமே ஆர்டர் போடுங்கள். உங்களது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வைக்க வேண்டாம். ஏதாவது ஒரு பொருளை வாங்க நீங்கள் ஆசைப்படும்போது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்து வைத்து இருந்தால் உடனே ஆர்டர் போட்டுவிடுவீர்கள். அதையே தேடி எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான நேரத்தில் தேவையற்ற பொருளை வாங்கலாமா? என யோசிக்க அவகாசம் கிடைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பல நிறுவனங்கள் தனது பொருளை விற்பனை செய்கின்றன.
குறுந்தகவல் அவசியம்
நீங்கள் வாங்கும் பொருளை விற்பனை செய்வது யார் என்பதிலும் கவனமாயிருங்கள். அவர்களை பற்றிய கருத்து பதிவுகளை கவனிப்பது முக்கியம். ஆன்லைனில் நிறைய சலுகை அறிவிப்பார்கள். விலை குறைவாக இருந்தாலும், அது உங்கள் கையில் கிடைக்கும் வரை ஆகும் செலவுகளை ஒப்பீடு செய்யுங்கள்.பொருளை பார்த்து விலை குறைவு என்றவுடன், 'அந்த பொருளை மற்றவர் வாங்கிவிட்டால்?' என்கிற வேகத்தில் ஆர்டர் போட வேண்டாம். அது பலரால் பயன்படுத்தப்பட்ட பொருளா? அது சிறப்பானதா? என்று பாருங்கள். பொருளை பற்றி உள்ள விளக்கத்தை முழுமையாக படிக்காமல் ஆர்டர் போடவே வேண்டாம். ஆர்டர் செய்யும்முன், பொருட்கள் கிடைக்கும் காலத்தோடு வர்த்தகம் நடைபெறும் நாட்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பொருளை தருவார்களா? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. ஆன்லைனில் ஆர்டர் போட்டவுடன் வரும் மெயில் மற்றும் செல்போன் குறுந்தகவல்களை பத்திரப்படுத்த வேண்டும். பொருள் கிடைப்பதில் குளறுபடி ஏற்பட்டால், இந்த தகவல்களை கொண்டே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த குறுந்தகவல் இல்லாவிட்டால், எந்த நிவாரணத்தையும் பெற முடியாது.
தவறாமல் படிக்கவும்
செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் என எதை நீங்கள் ஆர்டர் செய்திருந்தாலும் பார்சல் கொண்டு வருபவர்களை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அதுதானா? என்பதை சோதித்து பார்த்துவிட்டு, பெற்ற பிறகே அவர்களை அனுப்பவும்.நீங்கள் வாங்கிய பொருள் எலக்ட்ரானிக் பொருளாக இருப்பின், வாங்கியவுடன் அது செயல்படுகிறதா? என்பதை சோதிக்கவும். அதில் பிரச்சினை இருந்தால் உடனடியாக மாற்றி கொள்ள முடியும்.நேரில் பொருள் வாங்கும்போது ஆராய்ந்து வாங்குகிறோம். ஆன்லைனில் வாங்கும்போது அதற்கான வாய்ப்பில்லை. ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அதை பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். நேரில் வாங்கும்போது அடுத்தவரின் ஆலோசனை கேட்போம். ஆன்லைனில் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் ரேட்டிங் என்ன, ஏற்கெனவே பொருள் வாங்கியவர்களின் அனுபவங்களையும் தவறாமல் படிக்க வேண்டும்.
ரிட்டன் பாலிசி
நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்னால் ஷாப்பிங் செய்யும் இணையதளத்திற்கு சென்று பொருட்களுக்கான தொகையை திரும்ப பெறும் ரிட்டன் பாலிசி, ரீஃபண்ட் பாலிசி போன்ற விவரங்களை முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி ரிட்டன் பாலிசி இருந்தால் அதன் விதிமுறைகள் அனைத்தையும் படித்து பார்க்க வேண்டும். எத்தனை நாட்களில் பொருட்கள் ரிட்டன் செய்யப்படும், எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பன போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, ரிட்டன் செய்ய வேண்டிய பொருட்களை வாங்க உங்கள் வீட்டுக்கே வருவார்களா அல்லது நீங்கள்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டுமா? என்பதையும் பார்க்க வேண்டும்.நாம் ஒரு பொருளை கேட்க, நமக்கு அனுப்பப்படும் பொருள் வேறாக இருக்கலாம். ஆர்டர் செய்து பெறும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். ஆர்டர் செய்த பொருள் வராமல்கூட போகலாம்.
அதனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோரே, சற்றும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வாறு இருந்துவிட்டால் உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் மிகவும் கவனம் தேவை.
கேஷ்பேக் சலுகை
ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அப்பொருளுக்கு கேரண்டி - வாரண்டி என்ன? என்ற விவரங்களை பார்க்க வேண்டும். பொருளுக்கு ஏதாவது தள்ளுபடி வழங்கப்படுகிறதா? அதே பொருளுக்கு வேறு தளங்களில் அதிக தள்ளுபடி கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கேஷ்பேக் போன்ற சலுகைகளையும் நீங்கள் பெற முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருளை திரும்ப வழங்குவதாக இருந்தால் கேஷ்பேக் போன்ற சலுகைகள் திரும்ப பெறப்படுமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவணை முறை ஆபத்தா?
ஆன்லைனில் வாங்க விரும்பும் பொருள் அதிக விலை கொண்டதாக இருந்தால் பெரும்பாலும் தவணை (ஈ.எம்.ஐ.) முறையில் வாங்குவார்கள். இப்போதெல்லாம் குறைந்த விலை கொண்ட பொருளாக இருந்தால் கூட தவணை முறையில் வாங்க நினைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறைந்த பணம் செலுத்தினால் போதும் என்பது உங்களுக்கு சுலபமாக தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நீங்கள் பொருளின் அசல் விலையை விட அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ வாங்கினால், அதற்கு வட்டி பிடிக்கப்படுகிறதா, எவ்வளவு வட்டி பிடிக்கப்படுகிறது என்ற விவரத்தை எல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.பொருட்களை ஆர்டர் செய்யும்போது அதை டெலிவரி செய்வதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுமா என்பதை நீங்கள் ஆர்டர் செய்யும்போதே கட்டாயம் பார்க்க வேண்டும்.
பொதுவாக, அதிக விலை கொண்ட பொருட்கள் வாங்கும்போது டெலிவரி கட்டணம் இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஆனால் மிக நீண்ட தூரத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டாலோ அல்லது பொருளின் பாதுகாப்பு தன்மையை பொறுத்து டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பொருளின் விலை மற்றும் டெலிவரி கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு அது கடையில் விற்பனை செய்யும் விலையை விட மிக அதிகமாக இருந்தால் நீங்கள் கடையில் அப்பொருளை வாங்குவதே சிறந்தது.
- நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
- சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?
சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ''சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை'' என்கிறார்.
பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.
இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.
கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.
இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.
இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.
அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.
* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.
* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.
* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.
* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.
சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.
புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.
சைபர் கிரைமில் பணியாற்றிய போலீஸ் துணை கமிஷனர் (தலைமை அலுவலகம்) எஸ்.ஆர்.செந்தில்குமார்:- சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, சுயவிவரங்கள் அடங்கிய 'புரோபைல்', பகிரும் தகவல்களை நம்பிக்கையானவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் 'லாக்' செய்து வைக்க வேண்டும். சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடம் பழகும்போதும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்.
சமூக ஊடக கணக்குகளை முடக்கி, அதில் தொடர்பில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புமாறு தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். உள்பட வெவ்வேறு ஊடகங்களின் மூலமாக தங்களுடைய தொடர்புகளுக்கு, யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் 'ஓ.டி.பி'. கேட்பது இல்லை. எனவே எந்த காரணத்தை கொண்டும் 'ஓ.டி.பி.'யை யாரும் பகிரக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.
பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி?
* இணையதள வங்கி பரிவர்த்தனைகளுக்காக தரமான மற்றும் 'லைசென்ஸ்' பெற்ற 'ஆபரேட்டிங் சிஸ்டத்தை' பயன்படுத்தவேண்டும்.
* தகவல்களை உள்ளீடு செய்வதற்கு முன்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் 'யூ.ஆர்.எல்.'களை பரிசோதிக்கவேண்டும்.
* பொதுவாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
* இ-மெயில், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் 'பாஸ்வேர்டு'களை தேர்வு செய்யவேண்டும்.
உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 139 கோடி. இவர்களில் சுமார் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் நடப்பாண்டு முதல் காலாண்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 198 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2-வது காலாண்டில் 15.3 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 37 ஆயிரத்து 658 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவாகிய சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 748 மட்டும்தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 707 ஆகும்.
சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் தப்பிக்கும் என்பதே நிதர்சனம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
- பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
- சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடுகளின் பொது சபை (ஐ.நா) வெளியிட்டுள்ளது.
* ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குடரெஸ் கூறுகையில், "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.
* உலகளவில் 30 சதவீத பெண்கள் பாலியல் வன்முறையை அனுபவிக்கின்றனர்.
* 15 முதல் 19 வயதுடைய இளம்பெண்களில் 24 சதவீதம் பேர் நெருங்கிய உறவில் இருக்கும் நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
* ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமி கள் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்.
* 2021-ம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் (81,100) பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 56 சதவீதம் (45,000) பேர் கணவர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
* ஆசியாவில் சுமார் 17,800 பெண்கள் தங்கள் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.
* இதற்கு நேர்மாறாக, 2021-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஆண்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கை துணை அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களை பொறுத்தவரை குடும்பத்திற்கு வெளியே மற்றவர்களால் கொல்லப்படும் அபாயம் அதிகம் உள்ளது.
* இந்தியாவில், 2021-ம் ஆண்டில் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
* 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.
* இந்தியாவில் 2021-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் பெண்கள் இறந்ததாக 6,589 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 3.85 சதவீதம் குறைந்துள்ளது.
- தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
- ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.
பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.
அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.
சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.
பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
- எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.
ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது. எளிதில் உணர்ச்சிவசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள்
கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும்.
சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி
மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை.
அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும்.
சமூக சேவைகள்
மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம். வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும்.
அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.