என் மலர்
நீங்கள் தேடியது "Women's Premier League"
- ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது.
- டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலாவது மகளிர் பிரி மீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடி யத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடலஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடி வில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் 30 பந்தில் 65 ரன்னும் (14 பவுண்டரி) ஹேலே மேத்யூஸ் 31 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), அெமலியா கெர் 24 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய குஜராத் அணி 15.1 ஓவர்களில் 64 ரன்னில் சுருண்டது. ஹேமலதா அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். சைகா இஷாக் 4 விக்கெட்டும், புருண்ட், அெமலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
போட்டியின் 2வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை பிர போர்ன் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மெக்லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அதன்படி டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றன.
இதில், 6 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்து டெல்லி அணி விளையாடி வருகின்றன.
- டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது.
- 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடி யத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடலஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடி வில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது.
போட்டியின் 2வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை பிர போர்ன் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மெக்லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இதில், டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தன. இதில், டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கின.
இதில், பெங்களூரு அணி 20வது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களில் சுருண்டது. பெங்களூரு அணியை ௬௦ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றிப் பெற்றது.
- குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
- குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
ஆண்கள் ஐபிஎல் போன்று பெண்கள் ஐபிஎலாக பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இதில், குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், உ.பி அணி 170 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. தற்போது உ.பி அணி 6.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் கிரன் நவ்கிரே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் கிரேஸ் ஹாரிஸ் போராடினார். அதிரடியாக ஆடிய அவர் பந்துகளில் அரை சதம் கடந்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குஜராத் அணி பெற்ற 2வது தோல்வி இதுவாகும்.
- நேற்றைய ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.
- இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய டெல்லி-பெங்களூரு இடையிலான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் இடுப்பு உயரம் அளவுக்கு வீசிய பந்துக்கு டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.
ரீப்ளேவுக்கு பிறகு அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.
20 ஓவர் வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.
- ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரி மீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித் தொடரில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியாகெர், நடாலி ஸ்கிவர்-பிரன்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.பந்து வீச்சில் சைகா இஷாக், வாங், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உள்ளனர். மும்பை அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலம் வாய்ந்ததாக உள்ளது.
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. அந்தஅணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் சோபியா டிவன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ஹீதர் நைட், மேகன்ஷட், ரேணுகா சிங் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் டெல்லி 223 ரன்கள் குவித்தது. இதனால் பெங்களூரு அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை டெல்லி வீழ்த்தியது. இரவு நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை உ.பி.வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியா சத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றது. டெல்லி, உ.பி.வாரியர்ஸ் அணிகள் தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- மும்பை இந்தியன்ஸ் துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
- புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் ஆடும்.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2-வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும்.
அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும். பெண்கள் பிரிமீபர் லீக்கில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது
- டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
- கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
- கடுமையாக போராடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 67 ரன்களும், சோபியா 65 ரன்களும் விளாசினர். பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹெதர் நைட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கடுமையாக போராடி 190 ரன்களே எடுத்தது. துவக்க வீராங்கனை சோபி டிவைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். எலிஸ் பெரி 32 ரன்களும், ஹெதர் நைட் (30 நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர். இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
- மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
- இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 6-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. 2 போட்டியில் தோல்வியை தழுவிய குஜராத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. பெங்களூர் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.
பெண்கள் பிரீமியர் 'லீக்' போட்டியின் 7-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே 2 போட்டிளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது போட்டியில் பெங்களூரை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. டெல்லி அணி முதல் போட்டியில் 60 ரன்னில் பெங்களூரையும், 2-வது ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சையும் வீழ்த்தின.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.