என் மலர்
நீங்கள் தேடியது "World Chess Championship"
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
- சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார்.
- உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். கடந்த மே 30 ஆம் தேதி நடந்த 3-வது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டு வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.
இந்நிலையில் இரண்டு உலக சாம்பியன்களை அனாயசமாக வென்றுகாட்டிய பிரக்ஞானந்தாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Incredible Praggnanandhaa! Beating both World No.1 Magnus Carlsen and No.2 Fabiano Caruana in classical chess at #NorwayChess is mindblowing. You're on a roll and still just 18! Keep the tricolour flying high. All the very best, @rpraggnachess! ? https://t.co/HJfCXA1UBl
— Gautam Adani (@gautam_adani) June 2, 2024
அவரது பதிவில், "உலகின் நம்பர் 1 மற்றும் நபர் 2 செஸ் வீரர்களை வீழ்த்தி நார்வே செஸ் தொடரில் அபாரமான வெற்றியை பிரக்ஞானந்தா பெற்றுள்ளது வியக்கவைக்கிறது. வெறும் 18 வயதில் இதை நிகழ்த்திக்காட்டிய நீங்கள் இன்னும் பல சாதனைகளைப் படைப்பீர்கள்.. நமது மூர்வண தேசியக் கொடியை உலக அரங்கில் உயரத்தில் பறக்கச்செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
- லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
இதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் குகேசை விட வேகமாக காய்களை நகர்த்திய லிரெனின் கை ஆரம்பத்திலேயே ஓங்கியது. 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். அப்போது அவரை விட எதிராளியிடம் 3 காய்கள் அதிகமாக இருந்தன. கிளாசிக்கல் வடிவிலான செஸ்சில் டிங் லிரென் 10 மாதங்களுக்கு பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காயுடன் ஆடுகிறார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இந்தப் போட்டியில் குகேஷ், சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதினர்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த குகேஷ், இதன்மூலம் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் குகேஷ்.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் இருவரும் தலா 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 4-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டம் டிராவானது.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
- 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர். நேற்று முன் தினம் நடந்த 4-வது சுற்று டிராவில் முடிந்தது.

4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் நேற்று 5 வது சுற்று நடைபெற்றுள்ளது. இதில் டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
22 நகர்த்தல் வரை ஆட்டம் சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் குகேஷ் சற்று சறுக்கினார். ஆனால் அடுத்தடுத்த நகர்த்தலில் அவர் மீண்டு வந்த நிலையில் 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.

எனவே ஐந்து சுற்றுகள் முடிவில், குகேஷ் மற்றும் டிங் லிரென் ஆகிய இருவரும் 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர்.
- டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர்.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இந்த நிலையில் 6-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் கடுமையாக போராடினார். ஆனால் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி டிங் லீரனுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் இந்த ஆட்டம் 46வது நகர்த்தலில் டிரா ஆனது.
- 6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
- முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.
முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது,6-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளது. குகேஷ்-டிங் லிரென் மோதும் 7-வது சுற்று போட்டி நாளை நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி சுமார் 5 மணி நேரத்தை கடந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் குகேஷுடனான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 7 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என 3.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 8-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி மீண்டும் டிராவில் முடிந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7, 8-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 8 போட்டிகளில் இருவரும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
- 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது/ World Chess Championship as the ninth game between Indian challenger D Gukesh and defending champion Ding Liren of China ended in yet another draw to still level on points here on Thursdayஉலக செஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜி. குகேஷ்- சீனாவின் டிங் லிரென் இடையே சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. 8 சுற்றுகள் முடிவில் இரண்டு பேரும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 8 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தனர். மற்று 4 சுற்றுகளும் டிராவில் முடிந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 9-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இருவரும் தலா 4.5 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
நாளை ஓய்வு நாளாகும். நாளைமறுதினம் 9-வது சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 14 சுற்றுகள் வரை போட்டி நடைபெறும். 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமான புள்ளிகள் பெற்றிருந்தால், அதன்பின் வெற்றியை தீர்மானிக்க faster time control கடைபிடிகக்ப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்.
முதல் சுற்றில் டின் லிரென் வெற்றி பெற்றிருந்தார். குகேஷ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 2-வது, 4வது, 5-வது, 6-வது, 7-வது மற்றும் 8-வது சுற்றுகள் ஏற்கனவே டிராவில் முடிந்திருந்தன.
54-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் போட்டியை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.