என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship"

    • ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.

    ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.

    ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.

    2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது. 

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
    • அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.

    இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

    ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.

    இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது.  ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.

    அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
    • இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    மும்பை:

    டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.

    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

    தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.

    பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது.

    இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

    இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.

    • ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
    • இலங்கை அணி 3-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் இருக்கிறது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் 'டிரா' ஆனது.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 75.56 சதவீதத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இறுதி போட்டிக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது. ஆஸ்திரேலியா 15 டெஸ்டில் 10 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 136 புள்ளிகள் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா அடுத்து இந்திய மண்ணில் 4 டெஸ்டில் விளையாடுகிறது. 4 டெஸ்டில் தோற்றால் ஆஸ்திரேலியாவின் சதவீதம் 59.65 ஆக குறையும். ஏதாவது ஒரு டெஸ்டில் டிரா செய்தாலே அந்த அணி இறுதி போட்டிக்கு நுழைந்து விடும்.

    மேலும் 4 டெஸ்டிலும் தோற்றாலும் இலங்கை-நியூசிலாந்து போட்டியை பொறுத்து முடிவு இருக்கும். ஆஸ்திரேலியா முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைய வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணி 14 டெஸ்டில் 8 வெற்றி 4 தோல்வி, 2 டிராவுடன் 99 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளிகள் 58.93 ஆகும். வங்காள தேசத்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரை 4-0, 3-1 அல்லது 3-0 என்று கைப்பற்றினால் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒரு வேளை 2-0, 2-2 என்ற கணக்கில் முடிந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இறுதி போட்டியில் நுழைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

    இதே போல இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும் போட்டியில் உள்ளன. இலங்கை அணி 5 வெற்றி, 4 தோல்வி, 1 டிராவுடன் 64 புள்ளிகள் பெற்றுள்ளது. சதவீத புள்ளியில் 53.33 ஆக உள்ளது. அந்த அணி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 13 டெஸ்டில் 6 வெற்றி, 6 தோல்வி, 1 டிராவுடன் 76 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 48.72 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்னும் 3 டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை இறுதி போட்டியை நிர்ணயிக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்திய மண்ணில் இந்த தொடர் நடக்கிறது. இலங்கை-நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்டில் விளையாடுகிறது. 

    • இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும்.
    • ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து ஐசிசி புதிய புள்ளிப்பட்டியலை வெளியிட்டது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 113 ரன்களில் ஆட்டமிழந்தது.

    115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

    இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அடுத்து புதிய புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதில் ஆஸ்திரேலிய அணி (66.67%) முதல் இடத்திலும், இந்தியா (64.06%) 2ம் இடத்திலும், இலங்கை (53.33%) 3ம் இடத்திலும் உள்ளன.

    எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.
    • ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டி ஜீன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்தியா இந்த முறை அதை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

    அதேவேளையில் உலக டெஸ்ட் சாம்பியந்திப்பின் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக நுழைந்துள்ள ஆஸ்திரேலியா தனது முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கும்.

    இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில் யார் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    சமீபத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வலுவான அணியாக காணப்பட்ட இந்தியாவுக்கு இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.

    இரு அணிகளும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நாம் காண்போம் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.
    • ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார்.

    அடுத்த மாதம் (ஜூன்) 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் ராகுல் விலகினார்.

    இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் அணிக்கு திரும்பி வெற்றிக்கு உதவுவதற்கான எல்லாவற்றையும் செய்வேன். அது தான் எனது இலக்கு. எனது காயத்தின் தன்மை குறித்து கவனமாக பரிசீலித்த மருத்துவ குழுவினர், தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் ஆபரேஷன் செய்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சியை விரைவில் தொடங்குவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
    • 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை.

    மும்பை:

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

    இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கபட உள்ளது. இதனை ஐசிசி அறிவித்துள்ளது.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
    • இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

    துபாய்:

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்ட வீடியோவை ஐசிசி வெளியிட்டது.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ரெட் ரிடெம்ப்ஷன் என்ற ஆக்ஷன் படத்தின் போஸ்டரில் ரோகித் சர்மா இடம் பெற்றிருக்கிறார். போஸ்டருக்கு 2021 உலக டெஸ்ட் இறுதிப் போட்டியை விட இந்தியா சிறப்பாகச் செயல்படுமா? என்றும் ரெட் பால் ரிடெம்ப்ஷன் என்ற வார்த்தையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ-யின் எமொஜியை தலைப்பாக வைத்திருக்கிறது.

    தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
    • ஆஸ்திரேலியா அணி எட்டு வருடங்களில் இந்திய அணியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்கடிக்கவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.

    இந்நிலையில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

    1880-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அன்று முதல் 38 டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் 18.42 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து மைதானங்களிலேயே இந்த மைதானத்தில் அவர்களின் மோசமான சாதனையாக இது உள்ளது.

    ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. மறுபுறம், அவர்கள் லார்ட்ஸில் 29 போட்டிகளில் 17 வெற்றிகளுடன், ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 43.59 -ஆக உள்ளது. இது 141 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்தின் 39.72 சதவிகிதத்தையும் அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் 33.33 சதவீதத்தையும் விட சிறந்ததாகும்.

    இங்கிலாந்து மைதானங்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் ஹெடிங்லியில் 34.62 சதவீதமும், டிரெண்ட் பிரிட்ஜில் 30.43 சதவீதமும், ஓல்ட் டிராஃபோர்ட் மற்றும் எட்ஜ்பாஸ்டனில் முறையே 29.03 சதவீதம் மற்றும் 26.67 சதவீதமாக உள்ளது.

    இதேபோல இந்திய அணி ஓவல் மைதானத்தில் பெரிய அளவில் சாதித்ததில்லை. இந்த மைதானத்தில் இந்திய அணி இரண்டு வெற்றி, ஏழு டிரா மற்றும் ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு 40 ஆண்டுகால டெஸ்ட் போட்டியில் ஓவல் மைதானத்தில் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    ஆஸ்திரேலியா அணி எட்டு வருடங்களில் இந்திய அணியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்கடிக்கவில்லை. இந்திய அணியிடம் நான்கு தொடர்ச்சியான தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய அணி சந்தித்துள்ளது.

    • ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள்.

    கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.

    கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.

    என பாண்டிங் கூறினார்.

    • தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும்.
    • நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன்.

    சிட்னி:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி லண்டன் ஓவரில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியை விரைவில் அவுட் ஆக்குவது முக்கியமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்கள். எனவே அவர்களை முடிந்த வரை சீக்கிரம் அவுட் ஆக்குவது அந்தந்த அணிகளுக்கு முக்கியத்துவமாக இருக்கும்.

    தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும். நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.

    கடந்த 3 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவைவிட இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளது. எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×