என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்தேர்வு"

    • மதுரையில் இன்று 13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மதுரை

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் இன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 8833 மாணவ- மாணவியர் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணி அளவில் தேர்வு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடக்கிறது. முன்னதாக மதியம் 1:30 மணிக்குள் மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நீட் தேர்வுக்காக வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் இன்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப் பட்டன.

    அடுத்தபடியாக ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து தேர்வு அறையிலும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 1500 மாண வர்கள் குறைவாக தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள்.
    • தற்பொழுது எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருப்பதை பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் தேசிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கு 4473 பேர் விண்ணப்பித்து உள்ளனர். நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இண்டர்நேஷனல் பள்ளி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, கோணம் கேந்திர வித்யாலயா பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடந்தது.

    தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள். இதனால் தேர்வு மையங்களின் முன்பு கூட்டம் அலைமோதியது. தேர்வு எழுத வந்த பெண்களை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    கொளுத்தும் வெயி லையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    தேர்வு மையத்துக்குள் செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தேர்வு கூடத்திற்கான விண்ணப்பத்துடன் தற்பொழுது எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருப்பதை பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை தெர்மல் ஸ்கேனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒருசில மாணவர்களுக்கு வெயிலின் காரணமாக உடலில் ெவப்பம் அதிகமாக இருந்தது. இதையடுத்து அவர்களை சிறிது நேரம் அமர வைத்து பின்னர் பரிசோதனை செய்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மேலும் கை கழுவும் திரவங்களும் வழங்கப்பட்டது.

    மதியம் தேர்வு தொடங்கி மாலை வரை நடக்கிறது. தேர்வு மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றாலும் அவர்களது பெற்றோர்கள் தேர்வு ைமயத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    • நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.
    • திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

    திருப்பூர் :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இத்தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஆண்டுதோறும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

    கூடுதல் தகவல்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் 73734 48484 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.திருப்பூர் நகரப்புற நீட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீட் தேர்வினை ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு என்.டி.ஏ., வழங்கியுள்ளது. இந்த முறை ஈரோடு மாவட்ட மையங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம்.

    திருப்பூரில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி சூரி என்ஜினீயரிங் கல்லூரி விஜயமங்கலம், கோபி கலை அறிவியல் கல்லூரி கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மையம் அமைய உள்ளது.என்.டி.ஏ., அறிவுறுத்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    ×