என் மலர்
நீங்கள் தேடியது "mamata banerjee"
- கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன்.
- தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வன்முறையை தடுக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் முர்ஷிபாத் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. பாதுகாப்புப்படையின் ஒரு பிரிவினர், மத்திய அமைப்புகள் மற்றும் பாஜக, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை எளிதாக்கி பதற்றத்தை தூண்டுகின்றன எனக் குற்றம்சாட்டினார்.
முஸ்லிம் மதத் தலைவர்களுடன் மம்தா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன். இது நாட்டை பிளவுப்படுத்தும். தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.
முர்ஷிதாபாத் கலவரத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து வந்த சக்திகளின் பங்கு இருப்பதாகக் எனக்கு செய்திகள் வந்துள்ளன. எல்லையைப் பாதுகாப்பது பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு இல்லையா?. மாநில அரசு சர்வதேச எல்லையை பாதுகாப்பதில்லை. மத்திய அரசு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
வன்முறையின் எல்லைப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து வன்முறையின்போது கற்களை வீசுவதற்கு எல்லை பாதுகாப்புப்படை யாருக்கு நிதியளித்தது என்பதைக் கண்டுபிடிப்பேன்.
அமித் ஷாவை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அவரது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்.
அமித் ஷா ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? அவர் ஒருபோதும் பிரதமராக மாட்டார். பிரதமர் மோடி வெளியேறிய பிறகு அவர் என்ன செய்வார்?. பிரதமர் தனது உள்துறை அமைச்சர் மத்திய நிறுவனங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அவரைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
- முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
லக்னோ:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.
வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?
வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமா��� முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.
- சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன்.
- வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்பட���கிறீர்கள் என்று எனக்கு தெரியும்.
கொல்கத்தா:
வக்பு திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதை தொடர்ந்து இது சட்டமானது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள் மேற்கு வங்காளத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
- பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
- தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அங்கு எவ்வளவு முயன்றும் மீடேற முடியவில்லை. அடுத்த வருடம் மேற்கு வங்காளத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தனது வேலையை தொடங்கி உள்ளது.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் இருவடையேயான தனிப்பட்ட வாட்ஸ்அப் chat-களின் ஸ்க்ரீன் ஷாட்களை பாஜக தலைவர் அமித் மாளவியா கசிய விட்டுள்ளார். இதோடு, தேர்தல் ஆணையத்தில் வைத்து திரிணாமுல் எம்பிக்கள் இருவர் சண்டையிட்டு கொண்ட வீடியோவையும் பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட chat-களில் கல்யாண் பானர்ஜி, சொந்த கட்சியில் இருக்கும் மற்றொரு பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவர் குறித்து குறை கூறுகிறார். அவரை கீர்த்தி ஆசாத் சமாதானப்படுத்துகிறார். அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு கல்யாண் பானர்ஜி ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த சாட்-இல் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இவ்வாறு கட்சியின் தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.
அவர் கூறியதாவது, "வெளியிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள் எங்களை அவமானப்படுத்தியுள்ளன, சங்கடப்படுத்தியுள்ளன. இது நடந்திருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்சியின் உள் தனியுரிமையை பராமரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன.
- பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
வட இந்தியாவில் நேற்று ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் செவன் பாயிண்ட் பகுதியில் ராம நவமி ஊர்வலம் தாக்கப்பட்டதாக பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் நேற்று கூறியிருந்தார்.
அவரது எக்ஸ் பதிவில், "காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன. கண்ணாடித் திரைகள் உடைந்தன. குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தற்செயலானதல்ல - இது குறிவைக்கப்பட்ட வன்முறை. முதுகெலும்பு இல்லாத காவல்துறை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
மம்தா பானர்ஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே படை அவரது திருப்திப்படுத்தும் அரசியலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அப்பாவி இந்துக்களைப் பாதுகாக்க ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை" என்று கொந்தளித்திருந்தார். இதுதொடராக வீடியோ ஒன்றரையும் அவர் பகிர்ந்தார்.
ஆனால் அந்த பகுதியில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அங்கு எந்த ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸ் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "பார்க் சர்க்கஸில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எந்தவொரு ஊர்வலத்திற்கும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அந்தப் பகுதியில் அத்தகைய ஊர்வலம் எதுவும் நடக்கவில்லை.
ஒரு வாகனம் சேதமடைந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.
- நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி ��ள்ளது.
- பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும்.
கொல்கத்தா:
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.
இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.
இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தரவேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என தெரிவித்தனர்.
மேலும், புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட்டும் சதி செய்துள்ளன என தெரிவித்தார்.
- முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக சென்றார்.
- பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணமானார்.
தற்போது லண்டனில் உள்ள மம்தா பானர்ஜி காலையில் தனது பாதுகாலவர்களுடன் ஜாகிங் மற்றும் பேக் வாக் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம், 'நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் என்று கேப்ஷன் இட்டுள்ளது.
மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
- பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
- இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.
மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-
நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
- ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் 2 நபர்களுக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அட்டை EPIC எண்கள், ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாபில் வசிக்கும் மக்களின் வாக்காளர் அட்டை EPIC எண்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
EPIC எண்கள் என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணாகும்.
இந்நிலையில், மமதா பானர்ஜி குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
"வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும். ஆகவே ஒரே ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும் ஒருவர் அவருடைய தொகுதியில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும்" என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
- நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன்.
கொல்கத்தா:
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் உள்பட 30 பேர் பலியானார்கள். இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது. அது மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு மேற்குவங்காள கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் பதிலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறுகையில், நான் எந்த சர்ச்சையிலும் நுழைய விரும்பவில்லை. இது ஒரு ஜனநாயக அமைப்பு. முதல்-மந்திரியின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒரு கவர்னராக நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா, மனிதனை கடவுளுடன் இணைக்கும் பாலமாக கருதுகிறேன். நா���்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன் என்றார்.