பைக்

3.88 லட்சம் யூனிட்களை திரும்பப்பெறும் பிரபல ஸ்கூட்டர் நிறுவனம்

Published On 2024-07-27 16:01 GMT   |   Update On 2024-07-27 16:01 GMT
  • "சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • 52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது.

சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா சுஸூகி அக்சஸ் 125 சிசி ஸ்கூட்டர்களை திருமப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 124, ஹீரோ டெஸ்டினி 125 ஆகியவற்றிற்கு போட்டியாக மார்க்கெட்டில் திகழ்ந்து வருகிறது.

"சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2022 ஏப்ரல் 30 முதல் 2022 டிசம்பர் 3-ந்தேதி வரை தயாரிக்கப்பட்டவையாகும்.

இக்னிஷன் காயிலில் (ignition coil) நிறுவப்பட்டு இருக்கும் உயர் டென்ஷன் கார்டு (high tension cord)-லேயே சிக்கல் இருப்பது தெரிய வந்த நிலையில் சுஸுகி அந்த முடிவை எடுத்துள்ளது.

52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது. மொத்தமாக 3,88,411 யூனிட்களை திரும்பப் பெற இருக்கிறது.

Tags:    

Similar News