கிரிக்கெட் (Cricket)

சிஎஸ்கே-வுக்கு மீண்டும் திரும்புகிறார் அஸ்வின்- இந்த முறை...

Published On 2024-06-05 12:45 GMT   |   Update On 2024-06-05 12:45 GMT
  • ஐபிஎல் தொடங்கிய காலத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
  • தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் போட்டியில் தனது திறமையான பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்.

இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாடினார். பின்னர் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸின் உயர் செயல்திறன் மையத்தின் (Chennai Super Kings High Performance Centre) பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அகாடமிகளை கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் "இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஸ்வின். அவரின் வருகை உயர் செயல்திறன் மையத்திற்கும், எங்களுடைய அகாடமிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பூஸ்ட்-ஆக அமையும்" என்றார்.

அடுத்த வருடம் மெகா ஆக்சன் நடைபெறுகிறது. அப்போது அஸ்வினை மீண்டும் ஏலம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆக்சனில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.

டோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக டோனி மட்டுமே முடிவு செய்ய வேண்டும். நாங்கள், அவருடைய ரசிகர்கள் அவர் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். இறுதியான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிப்போம்" என்றார்.

Tags:    

Similar News