கிரிக்கெட்

டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு

Published On 2024-06-29 05:34 GMT   |   Update On 2024-06-29 05:34 GMT
  • ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.
  • 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

சென்னை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டி நடக்கிறது. குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும், குவாலி பையர்-2 மற்றும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் நடக்கிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

போட்டிகள் தினசரி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் இருந்தால் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும். 7 நாட்கள் மட்டுமே 2 போட்டிகள் நடக்கிறது.

டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பரிசு தொகை கிடைக்கும்.

டி.என்.பி.எல். போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News