லைஃப்ஸ்டைல்

பித்தத்தை கட்டுப்படுத்தும் தூதுவளை சட்னி

Published On 2017-10-24 10:55 IST   |   Update On 2017-10-24 10:56:00 IST
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது தூதுவளை. இன்று தூதுவளையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தூதுவளை கீரை - ஒரு கப்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிட்டிகை,
புளி - சிறிதளவு,
நெய், உப்பு - தேவைக்கு.



செய்முறை :

வாணலியில் நெய் விட்டு உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

அதே நெய்யில் கீரையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

வதக்கிய அனைத்தும் நன்கு ஆறிய பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு உப்பு, புளி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News