search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • நமது கலாச்சாரத்தையும் மொழியையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை.
    • காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது.

    ஒரு பிரதேசத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை தகர்த்து  அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், ஒரு நாடு அதன் கலாச்சார செல்வம் மற்றும் அதன் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் இந்தியா தனித்துவமானது, ஏனெனில் உலகில் எந்த நாடும் நம்மை ஒப்பிட முடியாது.

    நமது கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை. அதுவே நமது வரையறுக்கப்பட்ட கடமை. இலக்கியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கை கொடுப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    கடந்த காலங்களில் நிகழ்ந்த படையெடுப்புகளைக் குறிப்பிட்டு பேசிய ஜகதீப், ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை தகர்த்து முறியடித்து அதன் மொழியை அழிப்பதாகும்.

    அவர்கள் நம் மொழி, நம் கலாச்சாரம், நம் மத இடங்களை கைப்பற்ற மிகவும் அடக்குமுறை கொண்ட கொடூரமானவர்களாக இருந்தனர்.

    காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது. நம்மை காயப்படுத்த, அவர்கள் நம் மத இடத்திற்கு மேலாக தங்கள் இடத்தை உருவாக்கினர். நம் மொழிகளை மட்டுப்படுத்தினர். நம் மொழி செழிக்கவில்லை என்றால், நம் வரலாறும் செழிக்காது என்று தெரிவித்தார். 

     

    • புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ குறுகிய பார்வையுடன் பார்க்கிறது.
    • மோடிஜியின் அரசு உலகளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முமொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு, நமது மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

     2022 இல் சென்னைக்கு வந்த செய்த மாண்புமிகு பிரதமர், "தமிழ் மொழி நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.  

    ஒரு மாநிலம் புதிய கல்விக் கொள்கை (NEP 2020) ஐ குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், அரசியல் கதைகளைத் தக்கவைக்க அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவதும் மிகவும் பொருத்தமற்றது.

    இந்தக் கொள்கை ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. NEP 2020 மொழியியல் சுதந்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்துகிறது . மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மொழியை தொடர்ந்து கற்க உறுதி செய்கிறது.

    இந்தியாவின் கல்வித் துறையின் முதுகெலும்பாக இருந்து வரும் மும்மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கட்டத்திற்குக் கொண்டுவருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது ஒருபோதும் எழுத்து மற்றும் உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை. இது பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பிப்பதில் சரிவுக்கு வழிவகுத்தது.

    காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்ய NEP 2020 முயல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
    • குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் துவாரகா ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது. துவாரகா மற்றும் பெட் துவாரகாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பிறகு 18 ஆண்டுகளாக அங்கு எந்த அகழாய்வு பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.) துவாரகா கடலில் ஆழ்கடல் அகழாய்வை தற்போது தொடங்கி உள்ளது. தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அலோக்திரிபாதி தலைமையிலான 5 ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகா கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளை தொடங்கியதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முதல் முறையாக அபராஜிதா சர்மா, பூனம்விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்வினா என்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.

    • எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது
    • பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும்.

    உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அதிக பயணிகள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

    சிறப்பு ரெயில் வரும் பிளாட்பார்மை கடைசி நேரத்தில் மாற்றி அறிவித்ததும், வரம்புக்கு அதிகமாக பொது டிக்கெட்டுகளை விற்றதுமே கூட்டநெரிசலுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் எக்ஸ் சமூக ஊடகத்தில் டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் தொடர்பான வீடியோக்களை அகற்ற இந்திய ரெயில்வே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கூட்ட நெரிசலின் வீடியோக்களைக் கொண்ட 285 சமூக ஊடக இணைப்புகளை குறிப்பிட்டு அதை நீக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    பல முன்னணி செய்தி நிறுவனங்களின் இணைப்பும் இதில் அடங்கும். கண்டதை பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பட்ட இந்த நோட்டீசில் எக்ஸ் தளத்துக்கு 36 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது தற்போது பொது வெளியில் தெரியவந்துள்ளது.

    இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் ரெயில்வே செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இறந்த நபர்களை இவ்வாறு சித்தரிப்பது தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.  

    • பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.
    • பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

    டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்லி பெண்களுக்கு, ரூ.2,500 வழங்கப்படும் திட்டத்தை, முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றுவோம் என டெல்லி பெண்களுக்கு பா.ஜ.க. உறுதியளித்தது.

    புதிய முதல்வர் ரேகா குப்தாவும், அவரது அமைச்சரவை அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து இருந்தனர். டெல்லி மக்களை ஏமாற்ற பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில்,

    பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.

    ஆம் ஆத்மி கட்சி தலைவரின் கருத்துக்கள் வந்தன. மேலும், தனது கட்சி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் புதிய அரசாங்கம் நிறைவேற்றும்.

    பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 உதவித்தொகை மார்ச் 8 ஆம் தேதிக்குள் கிடைக்கும். 100 சதவீதம் பெண்கள் மார்ச் 8 ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பண உதவியைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

    • டெல்லி முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பவன் கல்யாண் பங்கேற்றனர்.
    • அப்போது, நீங்கள் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 4-வது பெண் முதல் மந்திரி குப்தா ஆவார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி ரேகா குப்தாவின் பதவியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரை பிரதமர் மோடி வரவேற்றார்.

    மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

    இந்நிலையில், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், பிரதமர் மோடி இடையிலான உரையாடல் கவனத்தை ஈர்த்தது.

    இதுதொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், பிரதமர் எப்போதும் என்னுடன் நகைச்சுவையாகப் பேசுவார். அவர் என் உடையைப் பார்த்து, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலைக்குச் செல்கிறேனா என கேட்டார். அதற்கு பிரதமரிடம், தான் இன்னும் எங்கும் செல்லவில்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. இமயமலை காத்திருக்க முடியும் என நகைச்சுவையாகக் கூறினார்

    • உடல்நலக் குறைவால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு, தற்போது டாக்டர்கள் குழு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • குடியரசு துணைத் தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.
    • நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மம்மூட்டி நடித்து வெளியான "டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்" திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

    தற்போது இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, டெல்லியில் இந்திய துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர்-ஐ சந்தித்தார். நடிகர் மம்மூட்டியுடன் அவரது மனைவி சுல்ஃபத் மற்றும் சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும், துணை குடியரசு தலைவருடன் அவரது மனைவி சுதீஷ் தன்கரும் உடன் இருந்தார்.

     


    மோகன் லால் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மம்மூட்டி விரைவில் இணைய இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் படம் மூலம் நடிகர் மம்மூட்டி மற்றும் மோகன் லால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.
    • இவர் 2029-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து சந்தித்தார்.

    இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை குடியரசு தலைவர் அலுவலகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஞானேஷ் குமார் நேற்று (புதன் கிழமை) இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ராஜீவ் குமார் ஓய்வு பெற்ற நிலையில், ஞானேஷ் குமார் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ளார். இவர் வருகிற 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.

    • டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
    • டெல்லி பெண் முதல்வராக பதவி ஏற்ற 4-வது நபர் இவர் ஆவார்.

    டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணைநிலை ஆளுநர் சக்சேனா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ரேகா குப்தா பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் டெல்லி மக்கள் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பிதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    ரேகா குப்தா அடிமட்ட பொறுப்புகளில் இருந்து வளர்ந்து வந்தவர். கல்லூரி அரசியல், மாநில அமைப்பு, மாநகராட்சி நிர்வாகம் போன்ற பதவிகள் வகித்த நிலையில், தற்போது எம்எல்ஏ- ஆகி முதல்வராகியுள்ளார்.

    டெல்லி வளர்ச்சிக்காக முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ரேகா குப்தா உடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அதனடிப்படையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனையடுத்து ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.  அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் உள்ளிட்டவர்கள் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதன் மூலம் டெல்லியின் 4-வது பெண் முதல்வரானார் ரேகா குப்தா.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ரேகா குப்தா ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் 29 ஆயிரம் வாக்குகள் விததியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

    • ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் நேற்று இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், பாஜகவினர் 'ஷீஷ் மகால்' என்று அழைக்கும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதலமைச்சர் இல்லத்தை 'மியூசியமாக' மாற்றுவோம் என்று டெல்லியின் புதிய முதல்வரான ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த கெஜ்ரிவாலின் ஆட்சியின் பொது முதலமைச்சர் இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது.

    பாஜகவின் ஷீஷ் மகால் பிரச்சாரத்தின் விளைவாக ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    ×