உள்ளூர் செய்திகள்
போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
தேவகோட்டை அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தைச் சேர்ந்த ராஜு மகன் ஞானசுந்தர் (வயது 30). இவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன், ஒரு மாதமான பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் மாரிமுத்து (65) என்பவருக்கும், இவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. நேற்று இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஞானசுந்தரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், ஆறாவயல் சார்பு ஆய்வாளர் மருது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசுந்தர் அளித்த வாக்குமூலத்தில் மாரிமுத்து அவரின் மனைவி வள்ளிக்கண்ணு மற்றும் மகன்கள் வெங்கடாசலம் முத்து ஆகியோர் தன்னைப் பிடித்து கொண்டு கத்தியால் தலையில் வெட்டியதாக கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.