தமிழ்நாடு

மும்மொழி கொள்கை பற்றி 8 நகரங்களில் பா.ஜ.க. பொதுக்கூட்டம்- அண்ணாமலை பேசுகிறார்

Published On 2025-03-10 11:58 IST   |   Update On 2025-03-10 11:58:00 IST
  • தமிழ்நாட்டில் 8 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.
  • முதல் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது.

சென்னை:

தேசிய கல்வி கொள்கை வலியுறுத்தும் மும்மொழி திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்துகிறது. ஆனால் இருமொழி கொள்கையே தங்கள் லட்சியம் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.

இதையடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை பா.ஜ.க. தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளார்கள். மே மாதம் தான் இந்த திட்டம் முடிகிறது.

இதற்கிடையே மும்மொழி திட்டம் என்ன சொல்கிறது? இந்தியை மட்டும் திணிக்கவில்லை. தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு மொழியைத்தான் கற்றுக்கொள்ள சொல்கிறது.

இதுபற்றி பொதுமக்களிடம் மேலும் விவரிக்க விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசுவதற்கு அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

இதற்காக தமிழ்நாட்டில் 8 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

அதன்படி முதல் பொதுக்கூட்டம் வருகிற 23-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தேதி வாரியாக வருமாறு:-

மார்ச் 25-ந்தேதி- திருநெல்வேலி, ஏப்ரல் 5-ந்தேதி- வேலூர், ஏப்ரல் 12-ந்தேதி-காஞ்சிபுரம், ஏப்ரல் 19-ந்தேதி- சேலம், ஏப்ரல் 26-ந்தேதி சென்னை, மே 3-ந்தேதி- மதுரை, மே 11-ந்தேதி- கோவை.

இந்த கூட்டங்கள் நடைபெறும் ஒவ்வொரு கோட்டத்திலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை கூட்டத்தில் பங்கேற்க செய்யும் வேலையில் கட்சியினர் இப்போதே தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

Tags:    

Similar News