உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

Published On 2023-10-31 06:46 GMT   |   Update On 2023-10-31 06:46 GMT
  • தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்ட த்தில் தாலுகா வாரியாக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பாலன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மீனாட்சி நாயக்க ன்பட்டி, செட்டிநாயக்க ன்பட்டி, சின்ன பள்ள ப்பட்டி, முத்தழகுபட்டி, ம.மு. கோவிலூர், பூதிபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோசங்க ளை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட கவுரவத்தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News