உள்ளூர் செய்திகள் (District)

காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-11-21 17:15 GMT   |   Update On 2022-11-21 17:15 GMT
  • காவல் நிலைய நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
  • மீஞ்சூர் அடுத்த ராம ரெட்டிபாளையம் துவக்கப்பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர்.

பொன்னேரி:

உலக குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த ராம ரெட்டிபாளையம் துவக்கப்பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர்.

காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி, வாக்கி டாக்கி, கைதியை விசாரிக்கும் அறை, கணினி அறை, காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை, பதிவேடு அறை, புகார் எழுதும் முறை, ஓய்வறை, ஆகியவை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டன.

காவல் உதவி ஆணையர் பிரமானந்தன், மீஞ்சூர் காவல் ஆய்வாளர்கள், சிரஞ்சீவி, டில்லி பாபு, உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவலர் பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News