உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல், கொருக்குப்பேட்டையில் ரெயில்வே ஐ.ஜி. ஆய்வு

Published On 2025-02-09 16:52 IST   |   Update On 2025-02-09 16:52:00 IST
  • மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

ராயபுரம்:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 6-ந்தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.

கே.வி.குப்பம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து கீழே தள்ளவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து ரெயிலில் செல்லும் பணிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் படி, ரெயில்வே ஐ.ஜி. பாபு, சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது விரைவு ரெயில் மற்றும் மின்சார ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மகளிர் பெட்டியில் தனிநபராக பயணம் செய்யும் சூழ்நிலை இருந்தால் மற்ற பெட்டியில் சக பயணிகளோடு பயணம் மேற்கொள்ளவும், மர்ம நபர்கள் யாரேனும் தவறாக நடக்க முயற்சி செய்தால் ரெயில் பெட்டியில் உள்ள அவசரநிலை செயினை பிடித்து இழுக்கவும், அவசர உதவி எண் 1512, ரெயில்வே துறை எண் 139 ஆகியவற்றில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News