கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 நாட்கள் பகுதியளவு ரத்து
- அரக்ேகாணம், சோளிங்கர் இடையே தண்டவாள புனரமைப்புப் பணி நடப்பதால் தென்னக ரெயில்வே நடவடிக்கை
- காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவைக்கு புறப்பட்டு வரும்
கோவை,
கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், 4 நாட்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரக்ேகாணம், சோளிங்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாள புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் வருகிற 13,20,27 மற்றும் அக்டோபர் 4-ந் தேதிகளில் கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் எண் (12680) காட்பாடி- சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இதே போல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்.12679) சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவை புறப்பட்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு செய்திக்குறிப்பில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (எண்.06048) வருகிற 10-ம் தேதி மாலை 5 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் ரெயில்நிலையம் சென்றடையும்.