மேட்டுப்பாளையத்தில் நடன கலைஞருக்கு கத்திக்குத்து
- குடிபோதையில் நின்ற வாலிபரை உதயபிரகாஷ் கண்டித்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் உதயபிரகாஷ்(24). டான்ஸ் மாஸ்டர்.
சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்ற வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த உதயபிரகாஷ் அந்த வாலிபரின் அருகே சென்று அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து உதயபிரகாஷை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த டான்ஸ் மாஸ்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டான்ஸ் மாஸ்டரை கத்தியால் குத்திய பத்திரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்தர்ராஜன் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.