உள்ளூர் செய்திகள் (District)

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கு செல்லும் தருமபுரி மாணவர்கள்

Published On 2023-11-21 10:00 GMT   |   Update On 2023-11-21 10:00 GMT
  • 412 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
  • வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.

தருமபுரி, 

அரசுப்பள்ளி மாணவர் களின் கலை சார்ந்த திறன்களை வளர்ப்பதற்காக நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற 412 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் இன்று முதல் 24ந்தேதி வரை வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது. மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாண வர்களை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Similar News