உள்ளூர் செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பயின்றோர் கழக விழா

Published On 2023-10-08 14:33 IST   |   Update On 2023-10-08 14:33:00 IST
  • பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
  • 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் 28-ம் ஆண்டு பயின்றோர் கழக விழா நடந்தது. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஆல்வின் வரவேற்று பேசினார். பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கல்லூரி முன்னாள் மாணவியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி உயிரியல் துறை உதவி பேராசிரியையுமான காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கலை மற்றும் நடன உதவி பேராசிரியை சுஜாவதி மற்றும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பயின்றோர் கழக பேரவை செயலாளர் தேவதாசன் பூமன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்களாக ஆல்வின், உமா செயலாற்றினர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News