உள்ளூர் செய்திகள் (District)

விழாவில் முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில், முதியோா் தினவிழா கொண்டாட்டம்

Published On 2023-10-14 09:08 GMT   |   Update On 2023-10-14 09:08 GMT
  • பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
  • முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தினவிழா திருத்துறைப்பூண்டி பாரதமாதா முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா தலைமை தாங்கினார். வக்கீல் அரசு தாயுமானவா் முன்னிலை வகித்தாா். முன்னதாக பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து, மூத்தக்குடி மக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்க ப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவிப்பெறும் முதியோா் இல்லங்களில் இருந்து சமூக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னர், முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளி ப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனா். முதியோா் இல்லங்களை நடத்தி வரும் நிா்வாகிகளை மாவட்ட சமூகநல அலுவலா் பாராட்டி பாிசுகள் வழங்கி சிறப்பித்தாா்.

விழாவில் திருத்து றைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய சேவிகா, கிராம சேவிகாக்கள், வக்கீல் இன்குலாப், திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய உளவியல் ஆலோசகர் மெர்லின் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

பாரதமாதா முதியோா் இல்ல காப்பாளா் புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

முடிவில் திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News