108 ஆம்புலன்சு டிரைவர் விஷம் குடித்து சாவு
- சென்னியப்பன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
- இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (39). இவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சு டிரைவராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சென்னியப்பன் பள்ளிபாளையம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியதாகவும், இதனால் அவருக்கு கடன் ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இதையொட்டி அவர் கடந்த சில நாட்களாக கடனை கட்ட முடியாமல் மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைய டுத்து சென்னியப்பன் அந்த வீட்டை விற்பனை செய்து கடனை அடைக்கலாம் என்று தனது மனைவியிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து (விஷம்) மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.