உள்ளூர் செய்திகள்

வங்கி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-07-24 15:19 IST   |   Update On 2022-07-24 15:19:00 IST
  • கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார். அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • இது குறித்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுபுள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (46). விவசாயி. இவர் சம்பவத்தன்று கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார்.

அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News