உள்ளூர் செய்திகள்

சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.7 கோடியில் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-08-29 14:26 IST   |   Update On 2023-08-29 14:26:00 IST
  • ரூ. 7 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி:

ஓட்டப்பிடாரம் அருகே தருவைக்குளம் - வெள்ள பட்டி சாலையில் மழைக்கா லங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூ றாக இருந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என்று சண்முகையா எம்.எல்.ஏ. விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து ரூ. 7 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், உதவி பொறியா ளர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் மாரி முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட கவுன்சி லர் மிக்கேல் நவமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆலோ சனை மரியான், ஒட்டப்பிடா ரம் ஊராட்சி தலைவர் இளையராஜா, அவைத் தலைவர் சுப்ரமணியன், இளைஞரணி அணிட்டன், தருவைக்குளம் ஊராட்சி தலைவர் காடோடி, கீழ அரசடி ஊராட்சி தலைவர் ராயப்பன், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானபிரகாசம், தயாளன், கிளை பிரதிநிதி பிரஸ்நேவ், மகளிரணி அன்னசெல்வம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

Tags:    

Similar News