உள்ளூர் செய்திகள்

அலகுமலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-01-24 08:15 GMT   |   Update On 2023-01-24 08:15 GMT
  • மீனாட்சிவலசு உயரழுத்த மின்பாதையில் மின்பாைத மாற்றி அமைக்கும் பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாைல 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

திருப்பூர் :

தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  அலகுமலை துணை மின்நிலையத்தில் முதியா நெரிசல் மற்றும் மீனாட்சிவலசு உயரழுத்த மின்பாதையில் மின்பாைத மாற்றி அமைக்கும் பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாைல 4 மணிவரை பூசாரிபாளையம், கொளத்துப்பாளையம், கண்டியன் கோவில், சின்னாரிபட்டி, பெரியாரிபட்டி, மருதுரையான்வலசு, கருங்காலிபாளையம், தங்காய்புதூர், சடையம்பட்டி, கரட்டுப்புதூர், சுப்பகவுண்டம்பாளையம், கணபதிபாளையம், அலகுமலை, கரட்டுப்பபாளையம், காந்திநகர், உப்புகாரம்பாளையம், எஸ்.எம்.ஜி.பாளையம், அம்மாபாளையம், தாயம்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News