உள்ளூர் செய்திகள்

குளச்சலில் மது அருந்தி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.57,500 அபராதம்

Published On 2023-06-07 07:05 GMT   |   Update On 2023-06-07 07:05 GMT
  • குளச்சல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தினர்.
  • ஜனவரி மாதம் முதல் சுமார் 100 வழக்குகள் பதிவு

கன்னியாகுமரி :

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பி ரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் டி.எஸ்.பி. தங்க ராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பால செல்வன் மற்றும் போக்குவரத்து போலீசார் குளச்சல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தினர்.

சோதனையின்போது குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட ஓட்டு நர்களுக்கு குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகன ஓட்டுநர்கள் நேற்று இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மது போதையில் செல்போன் பேசிக்கொண்டு லாரி ஓட்டிய நபருக்கு ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், குடிபோதையில் கார் ஓட்டி வந்தவருக்கு ரூ.17 ஆயிரம் அபராதமும், குடிபோதையில் ஆட்டோ மற்றும் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.57,500 அபராதமாக கோர்ட்டில் செலுத்தப்பட் டுள்ளது.

சாலை விபத்துக்களை தடுப்பதற்காக குளச்சல் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News