உள்ளூர் செய்திகள்

தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

Published On 2022-11-02 12:50 IST   |   Update On 2022-11-02 12:50:00 IST
  • தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது
  • அரசு பள்ளி 10ம் வகுப்பு படித்து வருகிறார்

கரூர்,

கரூர் மாவட்ட அளவிலான தடகள் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, அரசு பள்ளி மாணவரை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

கரூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் விஷ்ணு, உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றார். மாணவர் விஷ்ணுவை, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 'ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News