உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி பெருமாள் நகரில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
- பெருமாள் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
- இதில் ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் பெருமாள் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதில் ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா வானது அனைவரின் வேண்டுதலின் பேரில் காணிக்கைகள் செலுத்தி கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இக்கோவிலுக்கு வந்த அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் கவுண்டர் (பெரிய மாணிக்கம், சின்ன மாணிக்கம், ராகவன், சின்னகுட்டி, திருவூர், முருகன், முனிராஜ், திருப்பதி, கோவில் பூசாரி, பெரிய பாண்டியன்) ஆகியோர் செய்து உள்ளனர்.